நிவேதா நிரஞ்சன் கூட போன்ல பேசிட்டு இருக்கா. அப்ப சக்தி வர்றா.
"நிவி.. நிவி..."னு கூப்பிடுறா.
நிவேதா.. "சக்தி எதுக்கு இப்டி கத்துற.."னு சொல்றா.
"ம்.. அது.. அது.."
"சொல்லு சக்தி.. என்னனு.."
"இங்க நீ கடலை வறுக்கிற வாசனை வெளியே வருது.. அதான் அப்பா உன்னை கூப்பிடுறாங்க.."னு சக்தி சொல்லவும் நிவேதா அவளை முறைக்கிறா.
சுந்தரம்.. "நிவேதா.. உனக்குனு சேர்த்த நகை இதெல்லாம்.. உனக்கு வேற எதுவும் வேணுமா.. இல்லை இதில எதுவும் டிசைன் மாத்தணுமா.."னு கேட்கிறாங்க.
நிவேதாவும் தனக்கு வேணுங்கிறத சொல்றா.
நிரஞ்சன் நிவேதா கல்யாணத்துக்கு மண்டபம், டெக்கரேஷன், சாப்பாடு.. என எல்லாத்தையும் சக்தி, நிவேதா கூட சேர்ந்து பேசி சுந்தரமும் கீதாவும் முடிவு பண்றாங்க.
நிவேதா கல்யாண இன்விட்டேஷன் எல்லாம் ரெடியாகிடுச்சு.
சொந்தக்காரங்க தெரிஞ்சவங்க எல்லாருக்கும் சுந்தரம் கொடுக்கிறதாவும்.. நிவேதாவோட ப்ரெண்ட்ஸ் சக்தியோட ப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் சக்தி கொடுக்கிறதாவும் முடிவு பண்ணிருந்தாங்க.
சக்தி பெரும்பாலும் எல்லாருக்கும் நேரிலே இன்விட்டேஷன் கொடுக்கிறா. நேரில கொடுக்க முடியாத ஒரு சிலரை போன் பண்ணி இன்வைட் பண்ணா.
கல்யாண வேலையா அலைச்சல் இருந்தாலும் சக்தி அடிக்கடி உதய்கிட்ட பேசிட்டு தான் இருந்தா.
ஒரு நாள் சக்தி உதய்கிட்ட சொல்றா.
"உதய்.. என் அக்காவோட கல்யாணத்துக்கு நீ கண்டிப்பா வரணும் சரியா.."
"சாரி.. அம்மு.. நான் வரலை.."னு உதய் சொல்றான்.
"ஏன்.."னு சக்தி கேட்கிறா.
அது.. அது.. எனக்கு..
உனக்கு.. என்ன..
கல்யாண வீட்ல நிறைய பேர் இருப்பாங்க.. தெரிஞ்சவங்க யாராவது பார்த்தா.. எதாவது தொண தொணனு பேசுவாங்க.. எனக்கு அது பிடிக்காது..
😁😁
சிரிக்காத அம்மு.. அதான் நான் சொந்தக்காரங்க வீட்டுக்கே போகமாட்டேன்..
அப்டியா.. உன் கல்யாணத்துக்கும் போகாத.. சொந்தக்காரங்க லாம் வருவாங்க..😁😁😜
கிண்டல் பண்ணாத அம்மு..😒
"சொந்தக்காரங்க பிடிக்காது.. பொண்ணுங்கள பிடிக்காது.. அப்புறம்.. யாரைத் தான் பிடிக்கும்.."
"அம்மா, அப்பா, ப்ரெண்ட்ஸ் அப்புறம்.."
"ம்.. அப்புறம்.."
"இப்ப நீ.."
சக்திக்கு தன்னை பிடிக்கும்னு உதய் சொன்னது உள்ளுக்குள்ள சந்தோஷமா இருக்கு.
Gud ni8 Uday😃
Gud ni8 Ammu😁
***
சக்தி தன் ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு இன்விட்டேஷன் கொடுக்கிறதுக்காக போறா.
மதி வீட்டில இன்விட்டேஷன் கொடுத்துட்டு கிளம்பும் போது சுந்தரம் சக்திக்கு போன் பண்றார்.
"சொல்லுங்க ப்பா.."
"சக்தி மா இன்விட்டேஷன் லாம் கொடுத்து முடிச்சிட்டீயா.."
"இன்னும் சிவா வீட்டுக்கு மட்டும் போணும் ப்பா.."னு சக்தி சொல்றா.
"சரிடா.. ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும்.. கொஞ்சம் வா டா.."
"ம்.. சரிப்பா.."னு சொல்லிட்டு சக்தி கிளம்பி போறா.
#இது சக்திக்கு மறக்க முடியாத சந்திப்பா இருக்க போகுது..
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..