சக்தி சுந்தரம் சொன்ன இடத்துக்கு போறா.
"எங்கப்பா போணும்.."
"இன்விட்டேஷன் கொடுக்க டா.. இந்திரா மேடம் வீட்டுக்கு.."னு சுந்தரம் சொல்றார்.
சக்தி நம்பவே முடியாத அளவு சந்தோஷத்துல இருக்கா.
சுந்தரமும் சக்தியும் இந்திரா மேடம் வீட்டுக்கு போறாங்க.
வீடு ரொம்ப பெரிசா இருக்கு. அங்க இருந்த ஒருத்தர்கிட்ட சுந்தரம் ஏதோ பேசிட்டு வந்து வெயிட் பண்ண சொன்னாங்க..னு சக்தி கிட்ட சொல்றார்.
சக்தியும் சுந்தரமும் உட்கார்ந்து இருக்காங்க. சக்தி வீட்டை பார்த்துட்டு இருக்கா.
பொருள் எல்லாம் விலையுயர்ந்தது போல இருந்தது.
ஆனா அதுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல ஒரு பெண்மணி வர்றாங்க.
அவ்ளோ எளிமையா.. இருக்காங்க..
"வணக்கம் மேடம்.."னு சுந்தரம் சொல்றார்.
"வாங்க.."னு சுந்தரத்தை பார்த்து சொல்றாங்க.
"மூத்த பொண்ணுக்கு வர்ற வெள்ளிக்கிழமை கல்யாணம் நீங்க கண்டிப்பா வரணும்.."னு சொல்லி சுந்தரம் இன்விட்டேஷன் கொடுக்கிறார்.
"நான் வராமலா.. கண்டிப்பா வர்றேன்.."னு இந்திரா சொல்றாங்க.
சக்தி கன்னத்துல கிள்ளி.. "அம்மு ம்மா.. தானே.."னு கேட்கிறாங்க.
சக்திக்கு பேச்சே வரலை.
"என்ன எதுவும் பேசாம இருக்கா.. இவதான் ரொம்ப அமைதியா.."னு சுந்தரம் கிட்ட கேட்கிறாங்க.
"அதெல்லாம் இல்லை. அவளுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.. இப்பதான் நேரில பார்க்கிறா.. அதான்.."னு சுந்தரம் சொல்றார்.
"இது முதல் தடவை இல்லை.. ஏற்கனவே பாத்திருக்க.. நியாபகம் இருக்கா.."னு சக்தி கிட்ட இந்திரா கேட்கிறாங்க.
"நியாபகம் இல்லை.. ஆனா அப்பா அடிக்கடி சொல்வாங்க.. அதை பத்தி.."னு சக்தி சொல்றா.
"ம்.. அப்போ எவ்ளோ குட்டிப் பொண்ணா இருந்தா.."னு இந்திரா சொல்றாங்க.
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..