எப்பவும் துறுதுறுனு இருந்த சக்தி.. அமைதியா எதையோ யோசிச்சிட்டே இருக்க ஆரம்பிச்சிட்டா.
உதய்ய பத்தி நினைப்புல இருந்து வெளியே வர்றதுக்கு வேலைல கவனத்தை காட்டுறது தான் வழினு தோணுது சக்திக்கு.
லீவு இன்னும் இரண்டு நாள் இருந்துச்சு. ஆனாலும் வேலைக்கு கிளம்புறா சக்தி.
ஏதோ யோசனைல.. எப்பவும் நிவேதாவ கூப்பிடுற மாதிரி.. சக்தி கூப்பிடுறா.
சக்தி அவங்களை கவனிக்காம.. "நிவி கிளம்பிட்டீயா.. வா.. போகலாம்.."னு திரும்பவும் சொல்றா.
கீதாவும் சுந்தரமும் அவளை பார்க்கிறாங்க.
"நிவி.. வா.. போகலாம்.. லேட்டாகுது.."னு சக்தி திரும்பவும் சொல்றா.
சுந்தரம்.. "சக்தி..மா.. என்னாச்சு உனக்கு.."னு கேட்கிறார்.
அப்புறம் தான் சக்திக்கு புரியுது வீட்டிலே இல்லாத நிவேதாவ கூப்டுகிட்டு இருக்காங்கிறது.
"ஏதோ நியாபகத்துல கூப்டுட்டேன் பா.."னு சொல்லிட்டு வேலைக்கு போறா சக்தி.
முழுசா மறக்க முடியலைனா கூட கொஞ்சம் கொஞ்சமா உதய் பத்தி யோசிக்கிறதுல இருந்து வெளியே வர முயற்சி பண்ணிட்டு இருந்தா சக்தி.
எப்பவும் வேலை.. லீவு நாள்ல கூட எதாவது பண்ணணும்னு வீட்டில எதையாவது செஞ்சிட்டு இருந்தா சக்தி.
இப்படியே இரண்டு மாதம் போயிடுச்சு. சக்தி வேலை முடிச்சிட்டு வரும்போது சுந்தரம் மளிகை சாமான் வாங்கிட்டு நடந்து வர்றார்.
சுந்தரம் சக்தி பைக்ல வீட்டில போய் இறங்குறார். ரொம்ப டயர்டா தெரியுறார்.
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..