சக்திக்கு அர்ஜீன் போட்டோ பார்த்ததும்.. "இவனா இந்திரா மேடத்தோட பையன்.."னு தோணுது..
எப்ப இவனை பர்ஸ்ட் டைம் மீட் பண்ணோம்..
ரகு ப்ரொப்போஸ் பண்ணப்போ.. என்னன்னே புரியாம வந்து என்னை தப்பா பேசுனான்..
ம்.. பர்ஸ்ட் மீட்டிங்.. very bad..
அடுத்தும் அப்டியே தான்..
ஆனா.. போட்டோவுக்கு நல்லா சிரிச்சிட்டே போஸ் கொடுத்துருக்கான்..
அன்னைக்கு பார்க்கும் போது கூட அந்த குட்டிப் பாப்பாகிட்ட கோபப்படாம நல்லா பேசுனான்..
ஆனா உன்னை மதிக்கலை சக்தி.. rejected..னு சொல்லிடலாமா..
இந்திரா மேடம் அன்னைக்கு குழந்தை மாதிரி என்கிட்ட கேட்டாங்க.. அவங்க இதை எப்டி எடுத்துப்பாங்க..
அப்பா அம்மா கிட்ட பேசிப்பாப்போம்..னு சக்தி வரும் போது.. சுந்தரமும் கீதாவும் பேசிட்டு இருக்கிறதை கேட்கிறா.
"ஏங்க சக்தி சரினு சொல்லிடுவா தானே.."
"சம்மதம் சொன்னா எல்லோருக்கும் சந்தோஷம் தான்.."
"எவ்ளோ நல்ல மனசுங்க.. அவங்களுக்கு.. அவங்க கிட்ட சம்பளம் வாங்குற நிலைமைல நாம இருக்கோம்.. ஆனா அவங்க நம்மளை தேடி வந்து நம்ம பொண்ணை கேட்கிறாங்க.."
"அவங்களுக்கு நம்ம பொண்ணை பிடிச்சிருக்கு மா.. அதான்.. அவங்க கஷ்டப்படும் போது ஒதுங்கி இருந்த சொந்தமெல்லாம் இப்ப நல்ல நிலைமைல இருக்கும் போது பொண்ணு கொடுக்க ஓடி வரறாங்க.. ஆனா இந்திரா மேடமும் சரவணன் சாரும்.. பொண்ணு சொந்தத்துல இருக்கணும்னு இல்லை.. நல்ல குணம் இருந்தா போதும்னு நினைக்கிறாங்க.."
"சரி.. பையன் எப்டி.. நல்ல பையனா.."னு கீதா கேட்கிறாங்க.
"ரொம்ப நல்ல பையன் மா.. சொந்தக் கம்பெனில ஒரு வருஷமா எல்லாரையும் போல சாதாரணமா வேலை பார்த்துட்டு இருக்கான்.."
"என்னங்க சொல்றீங்க.. யாருக்கும் தெரியாதா.."
"இல்லை.. எனக்கும் கணபதிக்கும் மட்டும் தான் அவன் இந்திரா மேடமோட பையன்னு தெரியும்.."
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..