19💕

7.6K 308 26
                                    

சரவணன் அர்ஜீன் கிட்ட பேசுறதுக்காக வர்றார்.

"அர்ஜீன்.."

"ஆங்.. என்னப்பா.."

"உனக்கு இந்தக் கல்யாணத்தில விருப்பம் இல்லையா.."

"அப்டிலாம் எதுவுமில்லை பா.."

"சமாளிக்கிற டா நல்லா.."

"அப்பா.."

"நாங்க பொண்ணு பார்த்திருக்கோம்னு சொல்லி இரண்டு நாளாச்சு.. இன்னும் பொண்ணு யாரு என்ன எதாவது கேட்கிறீயா.. நீயா எப்ப கேட்பனு நானும் காத்திட்டு இருக்கேன்.."னு சரவணன் சொல்றார்.

"என்னால முழுமனசோட சம்மதம் சொல்ல முடியலை ப்பா.. ஆனா அம்மாவை இவ்ளோ சந்தோஷமா நான் பார்த்து ரொம்ப நாளாச்சு ப்பா.. அதான் என்னால எதுவும் மறுத்து பேசமுடியலை.."

"ம்.. புரியுது டா.. வாழ்க்கையை எவ்வளவோ கனவோட ஆரம்பிச்சோம் நாங்க.. சந்தோஷமா இருந்தோம்.. அந்த ஆக்சிடெண்ட் பத்து வருஷ வாழ்க்கையை பாதிச்சிடுச்சு.. அதிலிருந்து வெளியே வரும்போது கம்பெனி.. அந்த கமிட்மெண்ட்ஸ்ல வாழ்க்கை போயிடுச்சு.. இப்ப தான் திரும்பவும் உன் கல்யாணம் மூலமா அந்த சந்தோஷம் நம்ம வீட்டுக்கு வருது.. நீயும் அதை புரிஞ்சு ஏத்துகிட்டதுக்கு ரொம்ப சந்தோஷம் டா.."

அர்ஜீன் எதுவும் பேசாம அமைதியா இருக்கான்.

"நம்ம சுந்தரத்தோட இரண்டாவது பொண்ணு தான் சக்தி.. போட்டோ உன் அம்மா போன்ல இருக்கு.. நீ பாரு.."னு சரவணன் சொல்றார்.

"ம்.. சரிப்பா.."னு அர்ஜீன் சொல்றான்.

கொஞ்ச நேரம் கழிச்சு அர்ஜீன் தன் ரூம்ல இருந்து ஹாலுக்கு வர்றான்.

அங்க இந்திரா கையில போனை வச்சுகிட்டு காபி குடிச்சிட்டு இருக்காங்க.

அர்ஜீன் எதுவும் பேசாம சோபால உட்கார்றான்.

"காபி வேணுமா அர்ஜீன்.."னு இந்திரா கேட்கிறாங்க.

"வேணும்னு சொன்னா போனை வைச்சிட்டு எழுந்து போவாங்க.. அந்தப் பொண்ணு போட்டோவை பார்த்துடலாம்.. இல்லைனா.. இந்த அம்மா கிண்டல் பண்ணுவாங்க.."னு மனசில நினைக்கிறான் அர்ஜீன்..

அடியே.. அழகே..Where stories live. Discover now