25💕

8.3K 305 18
                                    

அர்ஜூன் கார் பக்கத்தில போகும் போது ஒரு பொண்ணு அர்ஜூன் கிட்ட பேச வர்றா.

"அர்ஜூன்.."னு அந்தப் பொண்ணு கூப்பிடுறா.

அவளை பார்த்த உடனே.. அர்ஜூன் ரொம்ப கோபமாகுறான்.. "உன்னை யார் உள்ள விட்டது.. வெளியே போ.."னு அர்ஜூன் கோபமா கத்துறான்.

"அர்ஜூன்.. ப்ளீஸ்.. ஒரு நிமிஷம்.."னு அந்தப் பொண்ணு கெஞ்சுறா.

"செக்யூரிட்டி.. யார் இவளை உள்ள விட்டது.. வெளியே போக சொல்லுங்க.. செக்யூரிட்டி.."னு அர்ஜூன் ரொம்ப கோபமா கூப்பிடுறான்.

சக்திக்கு அர்ஜூன் எதுக்கு இவ்ளோ கோபப்படுறானு புரியலை..

"அர்ஜூன் என்னாச்சு.. ஏன் கோபப்படுற.."னு சக்தி கேட்க.. அர்ஜூன் அவளை முறைக்கிறான்.

அந்தப் பொண்ணு.. "அர்ஜூன்.. ப்ளீஸ்.. ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளு.."னு கெஞ்சுறா.

அர்ஜூன் அவ கையை பிடிச்சு இழுத்து வெளியே தள்ளிட்டு.. காரை எடுத்துட்டு வேகமா கிளம்புறான்.

சக்திக்கு ஒரு நிமிஷம் என்ன நடக்குதுன்னே புரியலை.. அர்ஜூன் ரொம்ப வேகமா கார் ஓட்டிட்டு போறதை பார்த்ததும் பயந்து போய் வேற கார்ல வீட்டுக்கு கிளம்புறா.

அர்ஜூன் கார் வீட்டில தான் நிக்குது. "நல்ல வேளை வீட்டுக்கு தான் வந்திருக்கான்.."னு நினைச்சிட்டு சக்தி இந்திராவையும் சரவணனையும் தேடுறா.

அவங்க இரண்டு பேரும் வீட்டில இல்லை.. "கோவிலுக்கு போறேன்னு அம்மா காலையில சொன்னாங்கல்ல.. நல்லதா போச்சு.."னு நினைச்சபடி சக்தி ரூமுக்கு போறா..

அங்க அர்ஜூன் ரொம்ப கோபமா சுவரில தன் கையால குத்திட்டு இருக்கான்.

"அர்ஜூன்.. யார் அந்தப் பொண்ணு.. எதுக்காக இவ்ளோ கோபப்படுற.."னு சக்தி கேட்கிறா.

"பேசாம வெளியே போயிடு.."னு அர்ஜூன் பல்லைக் கடிச்சிட்டே சொல்றான்.

"அர்ஜூன்.."னு சக்தி கூப்பிடுறா.

"என்ன தெரியணும் உனக்கு.. அவ யாருனு தெரியணுமா.. லவ் பண்றேனு கூடவே சுத்திட்டு.. கடைசியில உன்னை மாதிரி ப்ரெண்டா தான் பழகுனேனு சொல்லி கழட்டி விட்டுட்டு போய்ட்டா.. உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கு எல்லாம் ஒரு பையன் உங்க மேல வைக்கிற பாசம் கண்ணுக்கு தெரியாது.. அவனோட பேங்க் பேலன்ஸ் தான தெரியும்.. அது ஒர்த் இல்லைனா ப்ரெண்டா தான் பழகுனேனு சொல்வீங்க.. நீயும் அப்டித்தான.. என்கிட்ட பணம் இருக்கிறதால தான என்னை கல்யாணம் பண்ணிகிட்ட.."னு கோபத்தில ஏதேதோ பேசிட்டே போறான்.

அடியே.. அழகே..Where stories live. Discover now