33💕

7.7K 275 44
                                    


சக்தி குளிச்சிட்டு.. கிச்சனுக்கு போறா. கீதா சக்திக்கு பிடிக்கும்னு பூரி பண்ணிட்டு இருக்காங்க.

"டீ எடுத்துக்கோ.."னு கீதா சொல்றாங்க.

"ம்.."னு சொல்லிட்டு சக்தி எடுத்துக்கிறா.

"மாப்பிள்ளைக்கும் கொண்டு கொடு.."னு கீதா சொல்றாங்க.

சரினு சொல்லிட்டு சக்தி அர்ஜூனுக்கு டீ எடுத்துட்டுப் போறா.

அர்ஜூன் கிட்ட டீ கொடுக்கிறா சக்தி. அர்ஜூன் டீ குடிச்சிட்டே.. "அம்மு.. அம்மாவுக்கு போன் பண்ணி சொல்லிடு.. நாம உங்க அக்கா வீட்டுக்கு போறோம்னு.." என அர்ஜூன் சொன்னதும் சக்தி ஷாக் ஆகுறா.

"நீயும் வர்றீயா.."னு சக்தி கேட்கிறா.

"ஏன்.. நான் வரவேண்டாமா.."னு அர்ஜூன் கேட்டதும்.. சக்தி.. "ஆங்.. அப்டிலாம் இல்லை.."னு சொல்றா.

சுந்தரம்.. "சக்தி.."னு கூப்பிடுறார்.

"அப்பா கூப்பிடுறாங்க.."னு சொல்லிட்டு சக்தி ரூம்ல இருந்து போயிடுறா.

எல்லாரும் காலையில சாப்பிட்டு முடிச்சிட்டு கிளம்புறாங்க.. அர்ஜூன் தான் கார் ஓட்டிட்டு வர்றான்.

அர்ஜூன் கலகலப்பா பேசிட்டு வர்றான். சக்தியும் உதய் பத்தி யோசிக்காம இருக்கா. அர்ஜூன் கூட இருக்கிற அந்த சந்தோஷம் அதுவே இப்போதைக்கு போதுமானதா இருந்துச்சு சக்திக்கு.

அது வேற எதைப்பத்தியும் யோசிக்க விடலை சக்தியை..

சாப்பிடுறதுக்கு மட்டும் வண்டியை நிறுத்தினாங்க.. கொஞ்ச நேரம் வண்டியை நிறுத்திட்டு தூங்கிக்கலாம்னு சொன்னதுக்கு அர்ஜூன் வேண்டாம்னு சொல்லிட்டு வண்டி ஓட்டுனான்.

நிவேதா வீட்டுக்கு வந்துட்டாங்க. அர்ஜூன் கார் ஓட்டிட்டு வந்த டயர்டுல படுத்து தூங்க ஆரம்பிச்சிட்டான்.

சுந்தரம், கீதா, சக்தி எல்லாரும் நிவேதா கூட பேசிட்டு இருந்தாங்க.

அப்ப நிவேதா வீட்டுக்கு பக்கத்து வீட்டில இருக்கிற இரண்டு குட்டி பசங்க வர்றாங்க.

அடியே.. அழகே..Where stories live. Discover now