சக்தி அர்ஜூன் எழுதின கவிதையை அர்ஜூன் கிட்டயே காட்டி.. "இத யார் எழுதினதுனு யோசிக்கிறேன்.."னு சொல்றா.
அர்ஜூனுக்கு அதை பார்த்ததும் லைட்டா சிரிப்பு வருது. ஆனா கண்ட்ரோல் பண்ணிட்டு.. "அம்முன்னு எழுதிருக்கு.. அம்மு நீ கவிதை லாம் எழுதுவீயா.."னு கேட்கிறான் அர்ஜூன்.
"நிவி என்கிட்ட இதை காட்டி நான் எழுதினேன்னு சொன்னா.. ஆனா நான் எழுதலை அர்ஜூன்.. அதான் யார் எழுதிருப்பாங்க னு யோசிக்கிறேன்.."னு சக்தி சொல்றா.
"நீயே எழுதிட்டு மறந்துட்டீயோ என்னமோ.."னு அர்ஜூன் சொல்றான்.
"எனக்கு ஒன்னும் அவ்ளோ ஞாபக மறதிலாம் கிடையாது.."னு சக்தி சொல்றா.
அப்ப அர்ஜூனுக்கு போன் வருது.. அர்ஜூன் காரை நிறுத்திட்டு.. போன் பேசுறான்.
கார்ல இருந்து யாருக்கோ கை காட்டுறான் அர்ஜூன். "இப்ப வந்துடுறேன் அம்மு.."னு சக்தி கிட்ட சொல்லிட்டு கார்ல இருந்து இறங்கிப் போறான் அர்ஜூன்.
யார்கிட்டயோ பேசிட்டு.. வந்து.. அவனோட பைக்கை follow பண்றான் அர்ஜூன்.
"யார் அர்ஜூன் அவங்க.. எதுக்கு அவங்கள follow பண்ற.."னு சக்தி கேட்கிறா.
"என்னோட காலேஜ் ப்ரெண்ட் பிரபா.. அவன் இங்க தான் இருக்கான்.. அவன் வீட்டுக்கு போறோம்.."னு அர்ஜூன் சொல்றான்.
அங்க போனதும் ஒரு பொண்ணு வந்து.. "அர்ஜூன்.. எப்டி இருக்க.."னு கேட்கிறா.
"நான் நல்லா இருக்கேன்.. என் wife சக்தி.."னு அர்ஜூன் சொல்றான்.
"ஶ்ரீ.. அவங்கள உள்ளே வரட்டும் முதல்ல.. அப்புறம் பேசு.. வாடா.. வாங்க சிஸ்டர்.."னு பிரபா சொல்றான்.
உள்ளே வந்ததும் அர்ஜூன்.. "பாப்பவ எங்க.."னு கேட்கிறான்.
பக்கத்து ரூம்ல இருந்து.. குழந்தை அழுற சத்தம் கேட்குது.. "கரெக்டா முழிச்சிட்டா.. பாரேன்.."னு சொல்லிட்டு பிரபா குழந்தையை தூக்கிட்டு வர்றான்.
சக்தியும் அர்ஜூனும் குழந்தையை தூக்கி கொஞ்சிட்டு இருக்காங்க.
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..