36💕

7.7K 286 36
                                    

அர்ஜூனும் சக்தியும் வீட்டுக்கு வரும் போது சக்தி நல்லா தூங்கிட்டு இருந்தா.

வீட்டுக்கு வந்ததும் அர்ஜூன் காரை நிறுத்திட்டு சக்தி தூங்குறதையே பார்த்துட்டு இருக்கான்.

சக்தி கண் முழிக்கவே இல்லை. அர்ஜூன் எவ்ளோ நேரந்தான் இப்டி பார்த்துட்டே இருக்கிறதுனு யோசிக்கிறான்.

இறங்கி சக்தியை தூக்கிட்டு போய் ரூம்ல படுக்க வைக்கலாம் னு தூக்குறான்.

சக்தி கண் முழிச்சிட்டு.. "அர்ஜூன்.. யாராவது பார்க்கப் போறாங்க.. விடு..நான் நடந்தே வர்றேன்.."னு சொல்றா.

"யாரு பார்த்தா என்ன.. என் பொண்டாட்டியை நான் தூக்குறேன்.. இதிலென்ன இருக்கு.."னு அர்ஜூன் சொல்றான்.

சக்தி அர்ஜூன் முகத்தை சந்தோஷத்தோட பார்க்கிறா.

அர்ஜூன் என்னனு கண்ணாலே கேட்க.. "ஐ லவ் யூ அர்ஜூன்.."னு சொல்லி சக்தி அர்ஜூன் கன்னத்துல முத்தம் கொடுக்கிறா.

அர்ஜூனும் சக்தியும் சந்தோஷமா வீட்டுக்குள்ள வர்றாங்க..

அங்க ப்ரீத்தி.. அர்ஜூனை பார்த்ததும் எழுந்து நிக்கிறா.

அர்ஜூன் சக்தியை இறக்கி விடுறான்.. அர்ஜூனோட முகமே மாறுது.. சக்தி அப்ப தான் ப்ரீத்தி நிக்கிறதை கவனிக்கிறா.

அர்ஜூன்.. "கணேஷ் அண்ணா.. மஞ்சு ம்மா.."னு வீட்டில வேலை பார்க்கிறவங்களை கூப்பிடுறான்.

சக்தி இந்தப் பொண்ணு யாருன்னு அர்ஜூன் கிட்ட பேசவே மறந்துட்டேனேனு யோசிச்சிட்டு இருக்கா.

வாட்ச்மேன் கணேஷ்..ம் சமையல் வேலை பண்ற மஞ்சுவும் வர்றாங்க.. அர்ஜூன் கூப்பிட்ட சத்தம் கேட்டு..

அர்ஜூன் அவங்கள பார்த்து.. "அப்பா அம்மாவும் வீட்டில இல்லை.. நானும் ஊரில இல்லை.. அப்புறம் எதுக்கு கண்டவங்கள எல்லாம் வீட்டுக்குள்ள விடுறீங்க.."னு கேட்கிறான்.

கணேஷ்.. "நான் நீங்க ஊரில இல்லைனு எவ்ளோ சொல்லியும் கேட்காம வேலை விஷயமா பார்க்கணும்.. உங்களை தெரியும் னு சொல்லி நாலு நாளா இந்தப் பொண்ணு வந்துட்டு இருக்கு.."னு அர்ஜூன் கிட்ட சொல்றார்.

அடியே.. அழகே..Where stories live. Discover now