சக்தி போனை பார்த்து தனக்கு தானே பேசிட்டு இருக்கா..
"Iam not ok uday.."னு மெசேஜ் பண்றா.
அர்ஜூன்.. "அம்மு.. என்ன பண்ற.. லேட்டாகுது.. வா கிளம்பலாம்.."னு சொல்றான்.
இரண்டு பேரும் கம்பெனிக்கு போறாங்க.. வழக்கம் போல வேலை பார்த்துட்டு இருக்காங்க..
அர்ஜூன் சாதாரணமா போனை எடுத்தாக்கூட.. சக்தி மெசேஜ் பண்ணுவான்னு தன் போனை பார்த்துட்டு இருக்கா..
அர்ஜூனும் அவ பண்றதை கவனிச்சிட்டே இருக்கான்.. ஆனா அன்னைக்கு முழுக்க அர்ஜூன் மெசேஜ் பண்ணவேயில்லை..
சக்தி.. "இவனுக்கு அம்மு மேல கொஞ்சங்கூட பாசமே இல்லை.."னு மனசுக்குள்ள திட்டிட்டே இருக்கா..
கம்பெனில இருந்து வேலையெல்லாம் முடிச்சிட்டு.. வீட்டுக்கு வர்றாங்க இரண்டு பேரும்..
சக்தி இன்னும் அர்ஜூன் மெசேஜ் பண்ணலையேனு கோபமா இருக்கா.
அர்ஜூன் அவளை இன்னும் வெறுப்பேத்தலாம்னு முடிவு பண்றான்.
அர்ஜூன்.. "மஞ்சு ம்மா.. டீ எடுத்துட்டு வாங்க.. நான் ரூமுக்கு போறேன்.."னு சொல்லிட்டு ரூமுக்கு போறான்.
சக்தியும் ரூமுக்கு போறா. அர்ஜூன் பால்கனில போய் நிக்கிறான்..
அர்ஜூன் போன் எடுத்து.. சக்திக்கு.. மெசேஜ் பண்றான்..
"Ammu.. dnt cal me Uday.. cal me Arjun.."
சக்தி மெசேஜ் வந்ததும் அர்ஜூன் தான் மெசேஜ் பண்றானு.. ரொம்ப சந்தோஷமா போனை எடுக்கிறா..
"Cal me Arjun.. ம்..😏 அர்ஜூனு சொல்லாம வேற என்ன சொல்வாங்க.."னு அந்த மெசேஜ் வாசிச்சிட்டு பழிப்புக் காட்டிட்டு இருக்கா சக்தி..
அர்ஜூன் அவ பண்றதை அவளுக்கே தெரியாம ரசிச்சபடி.. இருக்கான்..
சக்தி.. "ம்.. ஐடியா.."னு சொல்லிட்டு.. "நான் நேசிச்சது உதய்யை தான்.. அர்ஜூனை இல்லை.."னு மெசேஜ் பண்றா.
"அடிப்பாவி.. எல்லாம் தெரிஞ்சிட்டும்.. இப்டி பேசுறீயா.."னு அர்ஜூன் மனசுக்குள்ள நினைக்கிறான்.
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..