அர்ஜூன்.. "அம்மு.. ஏன் என்னை பார்க்க வரலை.. ஏன் எதுவும் சொல்லாம என்னை விட்டு போன.."னு சக்தி கிட்ட கேட்கிறான்.
"எனக்கு உன்னை பிடிச்சிருந்துச்சு.. அது காதலா.. இல்லையானு என்னை நானே குழப்பிட்டு இருந்தேன்..
அப்புறம் அது காதல் தான்னு எனக்கு தோணுச்சு.. ஆனா உனக்கும் அதே மாதிரி தோணிருக்குமா.. இல்லையானு.. தெரிஞ்சிக்கலாம்னு நினைச்சேன்.."னு சக்தி சொல்றா.
அர்ஜூன் அவ எல்லாத்தையும் சொல்லட்டும்னு அவளையே பார்த்துட்டு இருக்கான்..
"நான் உன்னை பார்க்கிறதுக்காக கிளம்பும் போது.. சிவா போன் பண்ணி கோவிலுக்கு வரச் சொன்னான்.. அங்க என் ப்ரெண்ட் மதி அவ லவ் பண்ண பையனை வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்க இருந்தா..
ப்ரெண்ட்ஸ் எல்லாரும் வீட்டில பேசலாம்னு அவகிட்ட பேசி பார்த்தாங்க.. ஆனா அவ கேட்கலை..
அவளோட அம்மா அப்பாவும் வந்து அவகிட்ட கெஞ்சுனாங்க.. ஆனா அவங்கள மீறி அவ கல்யாணம் பண்ணிக்கிட்டா.."னு சக்தி சொல்லிட்டு அர்ஜூனை பார்க்கிறா.
அர்ஜூன்.. "ம்.. சொல்லு.."னு சொல்றான்.
"அப்ப அவளோட அம்மா அப்பா ரொம்ப அழுதாங்க.. எனக்கு ஏனோ அவங்கள பாத்தப்ப என்னோட அப்பா அம்மா முகம் நியாபகம் வந்துச்சு..
நானும் எதுவுமே தெரிஞ்சுக்காம உன்னை நேரில பார்க்கிற அளவுக்கு வந்துட்டேன்.. அப்ப அவளை மாதிரி அப்பா அம்மாவை மீறி நடந்துக்கிற மனநிலையும் வந்துடும்னு பயம் வந்துச்சு..
இது காதல் இல்லை.. வெறும் ஈர்ப்பு.. இதிலிருந்து வெளியே வந்துடணும்னு உன்கிட்ட இருந்து விலகிட்டேன்.."னு சக்தி சொல்றா.
"வெறும் ஈர்ப்புனு நினைச்சு உன்னால கடந்து போக முடிஞ்சுதா அம்மு.."னு அர்ஜூன் கேட்கிறான்.
சக்தி இல்லைனு தலையாட்டுறா.
"அர்ஜூன்.. உனக்கு அம்மு மேல.. லவ் இருந்துச்சா.."னு சக்தி கேட்கிறா.
அர்ஜூன் சக்தியை பார்க்கிறான்.. சக்தியும் அர்ஜூன் பதிலை எதிர்பார்த்து அவன் முகத்தை பார்க்கிறா.
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..