42💕

7.9K 284 45
                                    

சக்தி அர்ஜூன் கிட்ட.. "உதய் எப்டி இறந்தான்.."னு கேட்கிறா.

அதைக் கேட்டதும் அர்ஜூன் சக்தி மடியில இருந்து எழுந்திருச்சிட்டு.. எதுவும் பேசாம அமைதியா இருக்கான்.

சக்தி.. அர்ஜூனோட தோளைத் தொடுறா. அர்ஜூன் திரும்பி சக்தி முகத்தை பார்க்கிறான்.

"அம்மு.. கண்டிப்பா  நீ அதை தெரிஞ்சுக்கணுமா.."னு கேட்கிறான் அர்ஜூன்.

சக்தி அர்ஜூனோட கன்னத்தில தன்னோட இரண்டு கையையும் வச்சு.. "அர்ஜூன் எனக்கு தெரியும்.. நீ உதய்யோட பிரிவை பத்தி உன் மனசில இருக்கிறத இன்னும் யார்கிட்டயும் சொன்னதே இல்லைனு.. அத என்கிட்ட பேசினா.. மனசில வலி இல்லாம இருப்பல்ல.. அதான்.."னு சொல்றா.

"நீ சொல்றதும் சரிதான் அம்மு.. நானே உன்கிட்ட பேசணும்னு தான் உன்னை அன்னைக்கு ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போனேன்.. ஆனா அப்ப பேச முடியலை.."னு அர்ஜூன் சொல்றான்.

"சரி இப்ப சொல்லு.."னு சக்தி அர்ஜூனை பார்க்கிறா.

"அம்மு.. நான் உன்னை அன்னைக்கு கூட்டிட்டுப் போனேன்ல.. ஹாஸ்டல்ல எங்க ரூம்.. நியாபகம் இருக்கா.. உனக்கு.."னு அர்ஜூன் கேட்கிறான்.

சக்தி ம்..னு தலையாட்டுறா.

"நானும் உதய்யும் 9th படிக்கும் போது இருந்து அந்த ரூம்ல தான் இருந்தோம்.. எங்களைத் தவிர வேற யாரும் இப்ப வரைக்கும் அந்த ரூம்ல தங்கமாட்டாங்க.."னு அர்ஜூன் சொல்றான்.

"ஏன்.."னு சக்தி கேட்கிறா.

"நாங்க 9th படிக்கும் போது எங்க கூட அந்த ரூம்ல இரண்டு பேர் இருந்தாங்க.. அவங்கள எங்க இரண்டு பேருக்குமே பிடிக்கலை.. அதனால.. அவங்க இரண்டு பேரையும் அந்த ரூமை விட்டு துரத்தணும்னு ப்ளான் பண்ணோம்.."னு அர்ஜூன் சொல்றான்.

சக்தி.. "என்ன ப்ளான் பண்ணீங்க.."னு கேட்கிறா..

"நைட் படுக்கும் போது வேணும்னே பேய் கதையா பேசிட்டு இருந்தோம்.. அவங்க இரண்டு பேரும் பயப்படாத மாதிரி இருந்தாலும் பயந்துட்டாங்கனு தெரிஞ்சுது.. நைட் பன்னிரண்டு மணியானதும் அவங்கள பயமுறுத்துனோம்.."னு அர்ஜூன் சொல்லிட்டு இருக்கான்.

அடியே.. அழகே..Where stories live. Discover now