Dream 4

142 13 8
                                    

கனவுகள் ரொம்ப அழகான ஒன்று அந்த கனவு நம்ம நிஜமாகவே மாறி போன ?

ஆமா என்னோட கனவுல நான் ரசிச்சு ‌பார்த்த ஒருத்தன்
எனக்கு காதல்னா என்னனு சொல்லி கொடுத்து என்‌ கிட்ட சொல்லிகாம போனவன்

அப்படி பட்ட ஒருத்தன நேர்ல நிஜத்துல பார்த்த அப்ப என் கிட்ட சொல்ல முடியாத ஒரு தவிப்பு என்னோட இதய துடிப்பு என் காதுல கேட்டுச்சு

எனக்கு வெள்ளி கிழமை கோவிலுக்கு போரது பிடிக்கும், கடவுள் பக்தி 50% அங்க தர சக்கர பொங்கல் 50%
இதுக்காக தான்
அப்படி நான் கடந்த வெள்ளி கோவிலுக்கு போன அப்போ தான் ஒரு எடத்துல கும்பலா இருந்துச்சு , நா கூட பொங்கல் தான் தராங்கனு போய் பாத்த நான் கனவுல பாத்த அவன் அங்க ஒருத்தன‌ போட்டு அடிச்சிட்டு இருந்தான்
ஆன‌ யாருமே அவன தடுக்கல
அப்படி என்ன தான் பிரச்சினைனு கேட்ட அந்த ‌ஆளு கோவிலுக்கு வர பொண்ணுங்கள ஃபோட்டோ எடுத்திருக்கான்

வாவ் என் ஆறடி அய்யனாரு செம்மல
தப்புன்னு ‌பாத்ததும் அடி பிச்சிட்டான்ல
அவன அடிச்சிட்டு அவன் மோபைல இவன் வாங்கிட்டு கோவிலுக்கு உள்ள போக ஆரம்பிச்சான்
நானும் அவன‌ பாத்திட்டு  அவன் பின்னாடியே போன
சும்மா சொல்ல கூடாது
வெள்ளை வேட்டி சட்டை மாப்பிள்ளை மாறி ஜம்முனு இருந்தான்
லைஃப்ல ஃபர்ஸ்ட் டைம் நேர்ல ஒரு பையன இப்படி ஜொள்ளு விட்டு பாக்குறது

அவன வெச்ச கண் வாங்காம‌ பார்த்ததுண்டு போய் அவன் மேல மோதி கீழ விழுந்துடேன்
கனவுல தாங்கி பிடிச்சவன் நிஜத்துல விழுந்த அப்ப கல்லு மாதிரி நிக்குறான்
வந்த கடுப்புள அவன கடிச்சி வெச்சிடலாம்னு தோனுச்சு
நா அவன ஏக்கமா பாத்தும் என்ன கொஞ்சகூட கண்டுக்காம கைய கட்டிக்கிட்டு வேடிக்க பாக்குறான்
சரியான திமிர் பிடிச்சவன்
ஆன‌ அந்த திமிர் கூட அவன் கிட்ட அழகு தான்

ஒரு வழியா நானே எழுந்து நின்னு பாத்த அப்பவும் அதே தெனாவட்டு அவன் கிட்ட
இவன் கிட்ட கோவ‌ பட்டு போகவும் முடியல
ஏன்ட என்ன‌ கனவுல வந்து தொல்ல பன்றனு கேக்கனும்
அதே சமயம் இவன் திமிர் எனக்கு கோவமா வந்துச்சு
அதே கோவத்தோட நா நடக்க ஆரம்பிச்சேன்
இப்ப அவனுக்கு முன்னால கொஞ்சம் வேகமாவே நடந்து கோவில் குளக்கரை கிட்ட போய் நின்னேன்
ஏனோ அந்த நிமிக்ஷம் எனக்கு நா ஆசையா பாத்த அவன் முகம் மறந்து போச்சு
எனக்கு பிடிச்ச சர்க்கரை பொங்கல் மறந்து போச்சு
என்னோட கோவம் தான் பெருச தெரிஞ்சது

அப்ப என் பக்கத்துல யாரோ வர மாறி இருந்துச்சு
எனக்கு தெரியும் அது அவன் தான்
ஆம‌ அவனே தான் கனவுல அவன் என் பக்கத்துல வரும் போது தோன்ற அந்த உணர்வு இப்ப நா உணருரேன்

எனக்கும் ‌அவனுக்கும் ஒரு ஐந்து அடி இடைவெளி இருக்கும்
என்ன பாத்தான்
நானும் அவன கோவமா பாத்தேன்

இப்ப எதுக்கு இந்த கோவம் அம்மனிக்கு
உனக்கு தான் நடக்கவே தெரியல அப்புறம் ஏன் இப்படி புடவ கட்டுர

நான் அப்பவும் கோவமா தான் இருந்தேன்

சரி ரொம்ப நேரம் கோவமா இருக்காத
வீட்டுக்கு கெளம்பு

அவன் கைல இருந்த பிரசாதம என் கிட்ட கொடுத்து அவன் கிளம்பிட்டான் , இவன் ஏன் வந்தான் எதுக்கு என்ன உரிமையா கூப்பிட்டு பேசினான் எதுவுமே புரியல ஆன இவனால மட்டும் தான் நா இப்படி நிக்கிறனு தெரியுது

நா ரொம்ப நேரம் யோசிசிட்டு இருந்தப்ப யாரோ என்ன கூப்பிட்டுற மாறி இருந்துச்சு
சட்டுன்னு என்ன பிடிச்சு இழுத்தாங்க நானும் துள்ளி எழுந்தேன்

ஆமா இதுவும் கனவு தான் கிட்ட தட்ட ஆறு மாதம் அப்பறம் அவன கனவுல பாத்தேன்

"உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் எங்கும் என் ஆவி
நீராவியாய் என்னை நீ மோதினாய்
உன் பார்வையில் ஈரம் உண்டாக்கினாய்
நீ தொட தொட நானும் பூவாய் மலர்ந்தேன்
நான் என் பெண்மையின் வாசம் உணர்ந்தேன்"

You've reached the end of published parts.

⏰ Last updated: Jan 03, 2019 ⏰

Add this story to your Library to get notified about new parts!

En Kanavin Thedal Nee..Where stories live. Discover now