பூ வாசம்

400 45 26
                                    

உன்னைக் காணும்பொழுதெல்லாம்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

உன்னைக் காணும்பொழுதெல்லாம்....

கோடையின் முதல் மழைத்துளி தரும் பரவசம் போல் ஒரு பரவசம் !!!!

சுடும் மண்ணில்
முதல் மழைத்துளி தரும்
முதல் மண்வாசனையை
ஆழ்ந்து நுகரும் பரவசம் !!!!

திடீரென தென்படும்
வானவில் தரும் பரவசம் !!!!

வானவில் போல் வந்தாய்
வானவில்லின் அத்துணை நிறங்களும் உள்ளடக்கிய
வண்ண வண்ணச் சித்திரமாய்
அடி நெஞ்சில் தங்கிவிட்டாய் !!!!

நீ வந்து தங்கிய நெஞ்சில்
நித்தம் நித்தம்
மலர்களின் வாசம் !!!!

ஒரு நாள் மனோரஞ்சிதப்பூ
மறுநாள் மகிழம்பூ
மற்றொரு நாள் மல்லிகைப்பூ
பிறிதொருநாள் மஞ்சனத்திப்பூ வாசம்
இப்படிப் பலப் பூக்களின் நறுமணங்கள்....

எனினும்
நித்ய முல்லையாக
நிரந்தரமாய்
நீ என்னுள் நிறைந்துவிட்டாய் !!!!

உனக்கு பிரியாவிடை கொடுக்க
மனமில்லை எனக்கு....

மீண்டும் ஒருமுறை
நிரந்தரமாய்
என்னுள் நிறைந்துவிடு !!!!

You've reached the end of published parts.

⏰ Last updated: May 23, 2021 ⏰

Add this story to your Library to get notified about new parts!

பூ வாசம்Where stories live. Discover now