மக்களே,
மாண்புறு மங்கையே,
இந்தக் சகாப்தம் போட்டிக்கு எழுதலாம் நினைச்சேன்... ஆனால் முடியல,டைம் இருந்து ஏதோ எழுத தோணல காரணம் கேட்டா, பிரதிலிபிக்கு அண்ட் வாட்பேட் அடிக்ட் ஆயிட்டேன். Fb கமெண்ட்ஸ் விட, பிரதிலிபி அண்ட் வாட்பேட் comments and மை சங்கம் தான் எனக்கு பூஸ்ட் சோ
இந்தக் கதை இங்க சூப்பர் ரைட்டர்ஸ் எழுதலாம் முடிவு பண்ணிட்டேன். அதான்..Description..
மாண்புறு மங்கையே கதை யாருடைய தழுவலோ காப்பி கதையோ இல்லை. இது என் சொந்தக் கற்பனை கதை... ஏன்னா, இங்கு
சிலர் வந்து கான்செப்ட்ட திருடிட்டாங்க... பிளா பிளானு வருவாங்க முன்னாடியே சொல்லிக்கிறேன்.அப்றம் இந்தக் கதையில் ஆசிட் சர்வயர் ஆதாவது ஆசிட் பட்ட பெண்ணோட கதை தான்...
.
தினமும் போட முடியுமானு தெரியல, பட், ஒரு நாள் விட்டு ஒருநாள் கண்டிப்பா வரும் காற்றும் வரும் மக்களே..
அக்டோப்ர்ல இருந்து வரும், அதுக்குள்ள subscripe பண்ணி படித்தாலும் சித்து ஹாப்பி அண்ணாச்சி...டீஸர்..
"மேடம் இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் இந்த அறைக்குள்ளே அடைஞ்சு கிடக்க போறீங்க...?" என்று பின்னே கைகளை கட்டிக் கொண்டு அவளது முகத்தை பார்த்து கேட்டார் சந்திரவதனா. அந்த முகத்தில் என்றும் அவள் காணும் கம்பீரம் இன்றும் குறையாது பிரதிபலிக்க, அவரை ஒரு நொடி இமைக்காது பார்த்தாள் சுடர்.
"ஆசிட் முகத்துல தானே பட்டது. உன் திறமையில இல்லையே... இந்த ஆசிட்டால உன் முகத்தோடு சேர்ந்து உன் திறமையும் வெந்து போயிடல. இன்னும் ஏன் டி இந்த அறைக்குள்ளே அடைஞ்சு கிடக்க, நான் உன் முகத்தை பார்த்து வேலைப் போட்டு கொடுக்கல, உன் திறமை, உனக்குள்ள இருக்க அந்த திறமையை பார்த்து தான் கொடுத்தேன்.இந்த நாலு சுவத்துல முடங்கிட்டால் உன் அழகு முகம் திரும்ப வந்திடுமா...?