ஒரு முறை தீ வேலை முடிந்து வீடு திரும்ப இரவாகி விட்டது....வண்டியில் போய் கொண்டு இருக்கும் போது தூரத்தில் யாரோ 3 பேர் ஒரு பெண்ணை பலவந்தமாக இழுத்து கொண்டு இருப்பது தெரிந்தது....வேகமாக அருகில் சென்று அவர்களை அடி புரட்டி எடுத்தாள்...ஆனால் ஒருவன் அங்கிருந்த கட்டையை எடுத்து அவளை அடித்து விட்டான்...நிலை தடுமாறினாள் தீ...
அப்பொழுது நண்பர்களுடன் அந்த பக்கம் வந்த பிரேம்...அதை பார்த்து விட்டு விரைந்து ஓடி வந்து அவர்களை அடித்து அவளையும் அந்த பெண்ணையும் காப்பாற்றினான்.....
சட்டென அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பில் கட்டி பார்த்து கொண்டான்....
தீ நன்றி கூறி இனி அந்த பெண்ணை தான் பார்த்து கொள்வதாக கூறி அவனை அனுப்பி விட்டாள்...அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவனிடம்....அவர்களை அவன் அடிக்கும் போது கூட வெறும் பார்வை பார்த்தாலே தவிர ஒன்றும் பேசவில்லை....😐😐😓😓தொழிலதிபர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அனைத்து தொழிலதிபர்களும் வந்து இருந்தனர்....கேள்வி கேட்ட அனைவரை விட தீ கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் அனைவரும் திணறி திண்டாடி போயினர்..😫😫😫......left and right வாங்கி விட்டாள்...பிரேம் தந்தையே தினறித்தான் போய் விட்டார்😵😵...பிரேம் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான் 😍😍..
பேட்டி முடிந்ததும்....ஓடி வந்தான் ..
ஏங்க..நில்லுங்க....என்னை தெரியலையா????
தெரியுது.....
அந்த பொண்ணு எப்டி இருக்காங்க???
நல்ல இருக்கா...எனக்கு தெரிஞ்ச ஒரு கம்பெனில பாதுகாப்பா இருக்கா....
அவ்வளவு தான் என்பது போல் அவள் சென்று விட்டாள்....
பிரேம்க்கு சப்பென்று ஆகி விட்டது.....😓😓என்ன பெண்ணிவள்???மரியாதை என்றால் என்னவென்று தெரியாது போல என நினைத்து கொண்டான்.....
மற்றொரு முறை....அவன் எப்பொழுதும் செல்லும் ஒரு மன நல காப்பகத்துக்கு சென்று அங்குள்ள குழந்தைகளிடம் பேசி விளையாடி கொண்டு இருந்தான்.....அப்பொழுது அந்த காப்பகத்தை பற்றி எழுத வந்த தீ பார்த்தது அவன் அங்குள்ள ஒரு குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருந்ததை தான்....
அவன் கவனிக்கவில்லை அவளை....
YOU ARE READING
முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓
Short Storya suspense police love story ..read பண்ணி பாருங்க😊