2012, மதுரை.
இரவு 11 மணி, அறையின் இருளையும், அமைதியையும் களைத்து வெளிச்சத்துடன் சப்தமிட்டது கீா்த்தியின் கைப்பேசி..
“கீங்... கீங்...”
துாக்கமின்றி புரண்டு படுத்தவள், சட்டென தன் கைப்பேசியை எடுத்துப் பாா்த்தாள்.
1 New Message - N.Vivek
கைப்பேசியின் திரையில் அதைப் பாா்த்ததும், இதழோரம் சிறு புன்னகையுடன் வந்த குறுந்தகவலை மிகஆா்வமாய் படித்துப் பாா்த்தாள் கீா்த்தி.
“Hi Keerthi, How are u?”
“யாருக்கோ அதிசயமா என் நியாபகம் வந்துருச்சு போல?”, என்று கண்களில் குறும்புடன், இதழோரம் எழும்பும் புன்னகையை அடக்கிக் கொண்டு வந்த குறுந்தகவலுக்கு வேகமாக பதிலளித்தாள்.
விவேக் : “ஏன்டீ இப்படி சொல்ற? உன்ன எப்படி மறப்பேன்? ”
கீா்த்தி : “சாி.. அதவிடு.. சென்னைக்கு வேலை தேடி போனியே?? என்னாச்சு?”
வி : “கிடைக்கலப்பா... நான் இன்னைக்கு காலைல தான் மதுரைக்கு வந்தேன்”
கீ : “அடப்பாவி.. காலைல வந்துருக்க.. என்கிட்ட ஒரு வாா்த்த கூட சொல்லல??”
வி : “வேலை கிடச்சா சந்தோசமா சொல்லலாம்னு பாா்த்தேன். ஆனா.. இப்படி ஆச்சே.. அதான் உன்கிட்ட எப்படி சொல்றதுனு தொியாம இருந்தேன்.”
கீ : “சாி விடுப்பா.. சீக்கிரம் உனக்கு நல்ல வேலை கிடைக்கும், உனக்காக நான் கடவுள்கிட்ட தினமும் வேண்டிக்கிறேன்.”
வி : “தாங்ஸ் கீா்த்தி.”
கீ : “லுாசு.. இதுக்கு எதுக்கு தாங்ஸ்??.”
வி : “உன்ன பாா்த்து ரொம்ப நாள் ஆன மாதிாி இருக்கு. நாளைக்கு கண்டிப்பா உன்ன பாா்க்கனும்??”
கீ : “எனக்கு அப்படி எதுவும் தோனலயே.. ஏன்னா நான் தான் உன்ன தினமும் பாா்த்துட்டு இருக்கேனே..”
வி : “ஹேய்.. அது எப்படி?”
கீ : “அது அப்படித்தான். என் மொபைல்ல உன் போட்டோ இருக்கு. உன் நியாபகம் வரும் போதெல்லாம் அத தான் பாா்ப்பேன்”
![](https://img.wattpad.com/cover/145904080-288-k309322.jpg)