வணக்கம் நட்புறவுகளே..
எனக்கு ஒரு சந்தேகம்.. முன் ஜென்ம தேடல் கதை என்றால் பிறந்தவர்கள் இறந்து மீண்டும் பிறப்பது.. அதை வைத்து நான் எழுதிய கதை முன்ஜென்ம தேடல் நீ.. என் கதையில் கையாண்ட கருவையும்.. சில காதபாத்திரங்களையும் அப்படியே வைத்து சில திருத்தம் மட்டும்.. அதாவது... நான் சிவன் என்று சொன்ன இடங்களில் முருகனை வைத்து... இப்படி தெளிவாய் திருத்தம் செய்து எழுதினால் அதை கதை கற்பனை திருட்டு என்பார்களா இல்லை. சுயமாய் எழுதும் எழுத்து என்பார்களா... இது குறித்து... அந்த எழுத்தாளர் 10 எபி முடிக்கும் போதே.. நேரடியாக நானே போனில் பேசினேன்... கதை முடிவு உங்கள் கதை போல இருக்காது... முடித்துவிட்டு உங்களிடம் தெரிவிக்கிறேன் என்றார்கள். ஆனால் இதுவரை என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.. ஆனால் ஒருவழியாக கதையை முடித்துவிட்டார்கள்.. இதற்கு நான் என்ன செய்ய.. என் கருவையும் கற்பனையை களவாடி செய்யும் செயலை எப்படி கண்டிப்பது... குறைந்தது ஒரு வருடமாக.. கஷ்டப்பட்டு... எழுதிய 8 மணி நேரக் கதை.. அதன் கருவை வைத்து வெகு சுலபமாய் 2 மணி நேரத்தில் எழுதி முடிக்கப்பட்ட கதையும் ஒன்றா.... நாளை உங்கள் கதைக்கும் இது நேரலாம்... கவனம்... கதை பிடித்தது அது போல எழுத விரும்பி எழுதினேன் என்று. .. உங்கள் கதையையே வேறு கோணத்தில் எழுதி உங்கள் கையில் கொடுப்பார்கள்... எச்சரிக்கை
YOU ARE READING
அன்புள்ள திமிரே..
Romanceஅன்பு அழகானது என்று தெரியும் திமிரானது என்று உன் முரட்டு காதலிருந்து தெரிந்தது