1

254 8 8
                                    

முகலாய அரசு ...
படை,  போர், வீரம் என்று அவர்கள்  காலம் மிகவும் அதிரடி படையாகவும் ...
மது மாது போதை அந்தபுரம் என்று மகிழ்ச்சியில் திழைத்த அரசாகவும் ...
அதுமட்டுமில்லாமல் வரலாற்று புகழ் மிக்க
ஷாஜகான் - மும்தாஜ்
அக்பர் - ஜோதா என்று அழியாத காதல் காவியங்களுக்கு பெயர் போன காலம் முகலாய காலமாகும் ...

அக்பர் மற்றும் ஜோதாவின் ஒரே வாரிசு ( இரட்டையர்கள் ஒருவர் இறந்துவிட்டார் .. )
நூருதீன் சலீம் ஜஹாங்கீர் ..நம் நாயகனாவார் ...
சிறு வயதிலே போதை பிடியில் மகிழ்விற்கு குறைவில்லாமல் அம்சமாய் திழைத்தார்.. 
அதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாய் பதினான்கு ஆண்டுகள் வீட்டை விடுத்து முழுவதும் போர் படை இரத்தம் என்று  தன்னையே அர்பணிக்கும் நிலைக்கே சென்று விட்டார் எனலாம் ...

இன்னும் மகனை தனித்து விடுத்தால் மொத்தமாக இவ்வுலகத்தை விட்டே சென்றுவிடுவான் என்று எண்ணி ஜோதாவின் விருப்பத்திற்கு இணங்கி படையை விடுத்து சலீம் இளவரசரை அரசவைக்கு திரும்பும்  படி ஆணையிடுகிறார் அக்பர் ...

சலீம் முகலாய அரசிற்கு திரும்பும் நாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது..
ஆடல் பாடல் என்று எவ்வித குறைகளும் இன்றி பலமாக பல ஏற்படுகள் செய்யப்பட்டது ....

சலீமிற்கு பரிசளிக்கும் பொருட்டு சிற்பியிடம் உலகத்திலே அழகான சிலைகள் செய்யுமாறு பணித்திருந்தார் அரசர் ...

பார்த்து பார்த்து செதுக்கிய சிற்பங்கள் முடியும் நிலையில் ஒரே ஒரு சிலை மட்டும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக சிலைக்கு மாதிரியாக  நாதிரா பேகம் சிலையாக நிற்க வைக்க முடிவெடுத்தனர் ...

சலீம் போர் முடிந்து கம்பீரமான யானை போல் அவ்வரங்கம் வந்தான் . சிலைகள் ஒவ்வொன்றாய் பார்வையிட்டவனை கவர்ந்தது ஒரு சிலை அது சிலை இல்லை சிலைக்கு பதில் உயிராய் நின்ற நாதிரா . அவள் கண்களை பார்த்த மாத்திரத்தில் தன் சிந்தையை முழுவதும் இழந்தான் என்றே சொல்ல வேண்டும் ...
அவளை பார்த்த அந்த நொடி அவன் மனதில் உதிர்த்த பெயர் அனார்கலி ... ஆம் சலீமின் அனார்கலி அவளே ...
காதல் கொண்ட மனம் தேன் நிறைந்த மலரை வண்டு சுற்றித் திரிவதைப் போல் அவளையே சுற்றி வந்தது ...

சலீமின் அனார்கலி Where stories live. Discover now