உயிரின் உதிரம்

40 6 3
                                    

கருவில் வரைந்த ஓவியமே
கை சேரும் முன் கரைந்தது ஏனோ
என் கை சேர விருப்பம் இல்லையோ
சாரல் மழையில் குடையாகவும்
சுடர் வெயிலில் செருப்பாகவும்
இருந்திருப்பேனே
கண்ணே கவி நிலவே
கண்ணில் வைத்து பார்த்திருப்பேனே
கண்ணீர் சுரக்க செய்து விட்டாயே
கானலாய் காற்றில் கரைந்த செல்வமே
என்னிடம் வாராயோ
பத்திரமாக பாதுகாப்பேன் கவனமாக
காத்திருக்கிறேன் கண்ணா உறக்கமில்லாமல்
காத்திருப்பை மெய்யாக்கிடுவாயோ
என் உயிரின் உதிரமே
வந்து விடு

You've reached the end of published parts.

⏰ Last updated: Aug 28, 2020 ⏰

Add this story to your Library to get notified about new parts!

கிறுக்கலின் வரிகள்Where stories live. Discover now