தன் பெற்றவர்கள் யாரென்றே தெரியாத நிலையில், தன் காயங்கள் எல்லாம் தானாக குணமடையும் அதீத ஆற்றல் கொண்ட, கதாநாயகன்... ஏதோ ஒரு காரணத்திற்காக கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டு கதாநாயகனோடு் வளர்ந்த அவனது இரண்டு நண்பர்கள்...அவர்கள் வாழ்வில் திடீரென அடுத்து அடுத்து நடக்க போகும் மர்மமான கொலைகள்... காரணம் என்ன? காரணமானவர்கள் யார்? அவற்றை காவல்துறை உதவியுடனும் விசாரிக்கும் நண்பர்களுக்கு கிடைக்கும் அதிர்ச்சியான தகவல்கள்.... நடக்கும் கொலைகளுக்கும் நண்பர்களுக்கும் என்ன சம்மந்தம்.?? அவர்கள் கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்ட சூழ்நிலை தான் என்ன...? அதுவும் அல்லாது ரகசிய ஆராய்ச்சி, இந்திய ராணுவத்தின் ரகசிய குழு என்ற சில கற்பனைகள்... இவற்றோடு நட்பு மற்றும் காதலோடு பயணக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைக்களம் இது....