💕 என்னவள் நீயே - 37 💕

991 49 47
                                    


"வைஷு, கொஞ்சம் wait டி" என்று அருணின் நெஞ்சில் இருந்த வைஷ்ணவியை விலத்திவிட்டு சென்றான் அருண்.

அந்த dinning table ஐ நோக்கி அவள் செல்ல முற்பட, அவளது கால்களில் பலூன்களோ தடுத்தன. அப்போது தான் தரையை ஆராய்ந்தாள் வைஷ்ணவி.
தரை முழுவதும் சிவப்பு வெள்ளை பலூன்கள், dining table யை சுற்றியும் இருந்தது. பெரிய table இல்லாவிட்டாலும் சிறிய வட்ட மேசை. ரோஜா இதழ்கள் பரவசெய்து அவளுக்கு விருப்பமான pasta செய்து வைக்கப்பட்டிருந்தது. மேசையில் நடுவே அழகிய roses bouquet. மேசையில் அங்காங்கே candles பற்ற வைத்தும் காணப்பட்டது. இவை எல்லாவற்றையும் ஆச்சரியப்பட்டு பாரத்துக்கொண்டு இருக்க,
"papa, do you love this??" என்று கேட்டபடி பலூன்களில் இடையில் நடந்து வந்தான் அவளது காதல் மன்னன்.

வந்தவன், அவள் முன்னே ஒரு முழங்காலை மடித்து தரையில் வைத்தும், மற்றைய காலை நிறுத்தியும், இரு கைகளையும் பின்னால் மறைத்தபடி,
" I love you வைஷு, my papa, my lifeline, my usuru, my baby, my pondati" என்றபடி பின்னால் மறைத்திருந்த கையை நீட்ட, அதில் அவளுக்கு பிடித்தமான இளம்சிவப்பு தனி ரோஜாப்பூவொன்று இருந்தது.
நடப்பதையெல்லாம் நம்ப முடியாமல் கண்களோ சந்தோசத்தால் கலங்கியது.
எல்லாம் உண்மையா? என்று நினைக்க, அவளது கன்னங்களை காற்றோ இதமாக தட்டி இது நிஜம் என்று சொல்லிக் கொடுத்தது.

"என்னடி, என் propose யை ஏற்றுக் கொள்ள மனசு இல்லையா?" என்று முகத்தை அப்பாவியாக வைத்தபடி கேட்க,
நின்று கொண்டிருந்த வைஷ்ணவியோ ஒடிச்சென்று முழங்காலில் நின்ற அருணின் கையிலிருந்த ரோஜாவை எடுத்தபடி, அவனை இறுக்க கட்டியணைத்தாள்.

"papa, இன்னும் இறுக்கமாக்கி கட்டிபிடிச்சா நா கீழ விழுந்துருவேன்டி. என் கூட சேர்ந்து நீயும் விழுவடி" என்று சொல்ல,
"பரவல்லடா" என்று மேலும் கட்டியணைப்பை இறுக்கினாள். இருவரும் முழங்காலில் நின்றுகொண்டு இருக்க, வானில் பட்டாசுகளும் வெடித்து அவர்களது காதலுக்கு ஆசி வழங்கின.
வைஷ்ணவியின் தோள்களில் பட்டுக்கொண்டிருந்த கூந்தலை தன் கரங்களால் சற்று ஒதுக்கி, வைஷ்ணவியின் கன்னத்தில் முத்தமிட்டான் அருண்.
"என்னடி, என் காதலுக்கு பதில் இன்னும் சொல்லவில்லையே" என்று வருத்தமாக அவளது காதருகில் சொல்ல,
" I love you baby, I love you arun, I love you so much" என்று சொன்னாள். அவளது கண்ணீரோ அருணின் tshirt யை நனைக்க,
"என்னடி, first time பார்க்குறேன் love வ சொல்லிட்டு அழுகிற பொண்ண" என்று அணைப்பிலிருந்து அவளை விடுவிடுத்து,
தன் கரங்களில் அவளது முகத்தை தாங்கினான்.

💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed) Where stories live. Discover now