முன்னோட்டம்.

127 8 8
                                    

அந்த கன்டைனர்களுக்கு இடையில் நின்று கிசுகிசுப்பாய் வேலையாட்கள் பேசிக்கொண்டிருக்க,

"என்ன இங்க மாநாடு?? வேலை நேரத்துல என்ன பண்றீங்க?" என்ற சூப்பர்வைசரின் அதட்டலில் ஆண்கள் அனைவரும் நகர்ந்து விட,பெண்கள் மட்டும் தங்கள் பேச்சை தொடர்ந்தனர்.

"அட உங்களுக்கு தனியா சொல்லணுமா?" என்றதும்,

"என்ன சார் சும்மா விரட்டிக்கிட்டே இருக்கீங்க? இது லஞ்ச் பிரேக் தானே? விடுங்களேன்", என்று காய்ந்தனர்.

"எனக்கென்ன இப்போ நம்பி சார் வர்ற நேரம். திட்டு வாங்குங்க.", என்று சலித்தபடி அவ்விடம் விட்டு அகன்றார்.

"நம்பி சாராம்ல... போய்யா.. எங்களுக்கு முதலாளி அவரில்லையே.. அப்பறம் என்ன பயம். சும்மா அவர் கத்துறதுக்கெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. நாங்களும் மனுஷங்க தான? எப்பயுமா உக்கார்ந்து கதை அடிக்கிறோம்? மதிய சாப்பாட்டு நேரத்துல கூட டப்பாவை மூடினதும் வேலையை ஆரம்பிக்க சொன்னா என்ன அர்த்தம்?", என்று சற்றே வயதில் மூத்த பெண்மணி கூற,

"விடுங்க அக்கா. இதெல்லாம் இன்னும் எத்தனை நாளு? நம்ம சின்ன முதலாளி வந்துட்டா எல்லாம் சரியா போய்டும்.", என்று ஒருவர் சமாதானம் சொன்னார்.

"அடிப்போடி.. நானும் அந்த நம்பிக்கையில் தான ஆறு வருஷமா இருக்கேன். ஆனாலும் சின்னவருக்கு அவர் தொழில் இருக்க இதை இப்படி மாமா கையில் கொடுத்துட்டு அப்பப்ப வந்து போறாரு. என்னத்த சொல்றது? நமக்கு எப்போ விடியுமோ?"

இவர்கள் இங்கே பேசிக்கொண்டிருந்த வேளையில் அந்த வளாகத்திற்குள் வழுக்கிக்கொண்டு வந்து நின்ற அந்த கருப்பு நிற பென்ஸ் கார்.

அயர்ன் செய்த பளிச்சென்ற இளமஞ்சள் நிற சட்டையும், கறுப்பு நிற கால்சராயும் அணிந்து, மேலைநாட்டு கறுப்பு  நிற தோலாலான காலணி பளிச்சிட, திமிரான நடையோடு உள்ளே வந்தார்  அறிவுடைநம்பி.

அவர் கண்கள் கண்டெய்னர்களை எண்ணியபடி வந்தது. குறிப்பிட்ட கண்டெய்னர் பின்னால் பேச்சுக்குறல் கேட்டதும் அதன் இடைப்பட்ட சந்தில் உள்ளே நுழைந்தவர்,

தேடல்களோ தீராநதி!Όπου ζουν οι ιστορίες. Ανακάλυψε τώρα