தினம் காலை எழுந்து, குளித்துவிட்டு, தலை சீவி, சீருடை உடுத்தி, பையை எடுத்துக்கொண்டு…
பள்ளிக்குச் செல்லும் முன் அப்பாவிடம் இருந்து இரண்டு ரூபாய் வாங்க, அவர் முன் இரண்டாயிரம் முறை பள்ளிக்குச் செல்லும் பையுடன் நடக்க வேண்டும்.
“அம்மா நான் ஸ்கூல்-கு போறேன்…” என்று குறைந்த பட்சம் இருபது முறையாவது சொல்லிவிட்டு. அப்பாவை நோக்கி ஒரு பாவமான பார்வையை வீசினால் தான் இரண்டு ரூபாய் கிடைக்கும்.
பள்ளிக்குச் சென்று கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு அந்த நாளைக் கடத்தி நண்பர்களுடன் சேர்ந்து வெளியே வந்தால்…
அங்கு ஒரு பாட்டி நமக்காகவே மாங்காய் உடன் காத்திருப்பார்!
அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாடி வாங்கிய இரண்டு ரூபாய்க்குக் கிடைக்கும் அந்த மாங்காய்…
தனி ருசி!
-த. சுஜித்ரா.
![](https://img.wattpad.com/cover/266636495-288-k792090.jpg)