• 14 •

85 11 25
                                    

               கன்று விரிந்த கண்களை அடக்க வகையறியாது சிலையென உறைந்து அமர்ந்திருந்த ஆலியா என்ன பேசுவதென்று தெரியாது தன் தாயின் முகத்தையே நோக்கிக் கொண்டிருந்தாள்.

ஆஸிமா கலங்கி இதுவரை பார்த்திராதவள் என்னவாயிற்று என்று மீண்டும் மீண்டும் கேட்க, அவரோ பதிலேதும் கூறுமாப்போல இல்லை. அஸருக்கான அதான் ஒலிக்க, அதான் முடிந்ததும் எழுந்து சென்று தன் ஹிஜாபை எடுத்து சுற்றத் தொடங்கினார் ஆஸிமா.

எங்கோ செல்வதற்காகக் கிளம்புகிறார் என்பது மட்டும் தெரியவே, தன் சந்தேகத்தைக் கேட்டாள் ஆலியா.

"Go, get ready!"

அவர் வாயிலிருந்து வந்தது அது மட்டுமே.

"ஏதாச்சும் நடக்கக்கூடாதது நடந்துட்டுதோ? என்னனு guess பண்ணவும் முடியலயே.."

மானசீகமாகத் தன் நகங்களைக் கடித்துக் குதறியவாறு இருந்தாள் ஆலியா.

கையில் இருந்த கடித உறையைப் பிரித்துப் பார்க்காது அவ்வாறே கட்டிலில் வைத்துவிட்டுத் தாயின் கட்டளையை மறுத்துக் கூறாமல் தன் அறைக்குச் சென்று தொழுதுவிட்டு அபாயாவை அணிந்து ஹிஜாபை சுற்றிக்கொண்டு வந்தாள்.

அவளது அறைக்கு வெளியே காத்திருந்த ஆஸிமா, அவள் வந்ததும் ஏதும் பேசாமல் படிகளின் பக்கமாகச் சென்றார். படிகளில் இறங்கிச் சென்ற ஆஸிமாவின் பின்னாடியே ஆலியாவும் இறங்கினாள், எங்கு செல்கிறாரென்று தெரியாமல் தன் மூளையைப் போட்டுப் பாடாய்ப்படுத்திக்கொண்டு..

சந்தனகுமாரியிடம் வெளியே சென்று வருவதாகக் கூறியவர் கதவைத் திறந்துகொண்டு வெளியேற, குழப்பமாக இருந்த ஆலியா அங்கு தன்னையே நோக்கிக் கொண்டிருந்த சந்தனகுமாரியை உன்னிப்பாகக் கவனிக்கவில்லை. தாயின் பின்பு நடையைக் கட்டிவிட்டிருந்தாள்.

வீட்டிலிருந்து வெளியேறியவர் நேராகக் கடற்கரையை நோக்கி சாந்தமாக நடந்து சென்றார். அமைதியே உருவாக அவர் பின்னால் நடந்து கொண்டிருந்த ஆலியாவோ நீண்ட நாட்கள் கழித்துக் கடற்கரைப் பக்கம் செல்வதனால் ஏற்பட்ட உள்மன உற்சாகத்துடன் நடந்தாள்.

தென்றலே தழுவாயோ..?Where stories live. Discover now