20

207 10 3
                                    

20…காதலன்!

“இந்த கிருஷ்ணாக்கு அறிவே இல்லை, கண்ட கண்ட நாய் வந்து என்னென்ன கேக்குதுங்க. சிங்கம் மாதிரி நிற்க்காம, பிசாசு அவங்க கேட்குறதுக்கு பதில் சொல்லிட்டு இருக்கான்” மெல்லிய குரலில் கிருஷ்ணாவை திட்டிட்டு இருந்தாள்.

கூட்டத்தில் ஒருவர்,

“டாய் அந்த பெண்ணை பிடிச்சி இருக்கா?”

அந்த மாப்பிள்ளையும் மேலும் கீழும் பார்த்தவன்.

“பொண்ணு சுமாராதான் இருக்கு, அட்ஜஸ்ட் செஞ்சிக்கலாம், என்ன கலர்தான் கொஞ்சம் கம்மியா, இதுல கண்ணாடி வேற போட்டு இருக்கு” ராதாக்கு கோபம் வந்தாலும் சபை முன் கூனி குறுகி நின்றாள்.

ஏதேதோ எண்ணங்கள் ஓடியது ராதாக்கு, ‘ஒரு வேலை கண்ணாக்கு என் அப்பியரன்ஸ் பிடிக்கலையா?  ஆமா... இல்லை‘ தனக்கு தானே பைத்தியம் போல நினைத்துக் கொண்டு இருந்தாள்.

கண்ணனுடன் பழக தொடங்கும் போது கண்ணாடி போடவில்லை கலரும் அதிகமா இருந்தது. ஒரு வேலை அதால என்னை விட்டுட்டு போயிட்டானா... மனம் எனும் சாத்தான் அவளை ஆட்டிப் படைத்தது.

அவளது மனம் ஒரு பக்கம் பயணம் செய்து கொண்டு இருக்க.

கிருஷ்ணாவின் பீப்பியை ஏத்தி கொண்டு இருந்தனர் வந்திருந்த குடும்பத்தினர்.

“பொண்ணு மூஞ்சி ஏன் வாடி போய் இருக்கு, எதாவது லவ் மேட்டர்னா முன்னாடியே சொல்லிடு மா, நாங்க கவுரவமான குடும்பம். சபையில் வந்து எதாவது நடந்ததுனா, நாங்க சும்மா இருக்க மாட்டோம்” மாப்பிள்ளையின் அம்மா.

“நீங்க வளர்த்த பொண்ணு’ன்னு சாதாரணமா எல்லாம் கல்யாணம் நடத்த கூடாது... சீர் எல்லாம் பிரமாண்டமா செய்யனும்” அதிகாரமாக சொன்னார் மாப்பிள்ளையின் அப்பா.

‘என்ன இவனுங்க கல்யாணம் ஏதோ நிச்சியம் செய்த அளவுக்கு பேசுராங்க’ கிருஷ்ணா அனைவரையும் ஒரு பார்வை பார்த்து வைத்தான்.

“சரிங்க நாங்க அப்பாகிட்ட சொல்லி சேதி அனுப்புறோம்” அவர்களை வெளியே அனுப்புவதிலேயே கிருஷ்ணா குறியாக இருந்தான், அவர்கள் பேச்சி அவனுக்கு சுத்தமா பிடிக்கவில்லை.

மனைவியின்...காதலன்!Where stories live. Discover now