அத்தியாயம் 9

611 23 0
                                    

இவளின் வருகைக்காக காத்திருந்தனர் தாத்தா பாட்டி இருவரும்.. "என்னடா ஒரு மாதிரியாவே இருக்க... தங்கச்சி கல்யாணம் ஆகி போக போறான்னா?
கவலை படாதேடா ஆதிரன் அவளை பத்திரமா பார்த்துப்பான்.."  என அவளின் தலைகோதி கூற அழுது விடுபவள் போல அவரைப் பார்த்து தலையசைத்தாள்.

    அப்போது அங்கு வந்த அனிதா "தாத்தா ஒரு  முக்கியமான விசயம்.. எல்லாரும் ரிஷி அண்ணன் ரூமுக்கு வாங்க போலாம்." என்று கூட்டிச் சென்றாள்.
அங்கு மொத்த குடும்பமும் இருக்க ரிஷியின் நண்பனான அமர் தனது போலீஸ் உடையில் இருந்தான்.
அவனைக் கண்ட தாத்தா " என்னப்பா அமர் கல்யாணத்துக்கு போலீஸ் ட்ரெஸ்லயே வந்து இருக்க " என்க ஆதிரனோ " தாத்தா அது வந்து....
ஐஸ்வர்யா ஒரு கிரிமினல்...அவளை அரஸ்ட் பண்ண வந்து இருக்காரு." என்று கூற இங்கு என்ன நடக்கிறது என தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்த ஐஸ்வர்யா உற்பட மொத்த குடும்பமும் அதிர்ந்தனர்.

வள்ளி பாட்டியோ "என்னடா சொல்ற"
என இடிந்து போய் சோஃபாவில் அமர்ந்தார். ஆராதனா ரிஷியைப் பார்க்க அவனோ தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் உட்கார்ந்து இருந்தான்.

"ஆமா பாட்டி  இவ பெரிய பெரிய பணக்காரங்ககிட்ட  பணம் பறிக்கிரவ.
அதே  மாதிரி தான் ரிஷி கிட்டயும் பணம் பறிக்க திட்டம் போட்டு தான் வந்து இருக்கா..பட் இவன் கிட்ட இருக்க அழகுக்கும் பணத்துக்கும் மயங்கி இங்கேயே செட்ல் ஆக ப்ளான் பண்ணி இருக்கா.. நம்ம ரிஷி  அவ‌மேல சந்தேகப் பட்டு என்கிட்ட விசாரிக்க சொல்லிட்டு இங்க கல்யாணம் பன்ற மாதிரி நடிச்சான்."  என்று கூறிய அமர் மேலும் தொடர்ந்து
"அது மட்டும் இல்ல உங்க கிட்ட வேலை பார்க்குற ரஞ்சித்தும்  இவங்க ஆளுதான்.. அவன் அழகான பொண்ணுங்களை லவ் பண்ணி ஏமாத்தி வெளிநாட்டுக்கு விக்குறவன்.
ஆராதனா கிட்ட கூட லவ்வுனு  சுத்திக்கிட்டு இருந்தான். அவன புடிச்சிட்டோம்... இது தான் இவளை புடிக்க சரியான நேரம்." என மொத்த கதையையும் கூற அணைவரும் விக்கித்து நின்றனர்.

     பெண் காவல் அதிகாரி ஐஸ்வர்யாவை அழைத்துச் செல்ல தான் கையும் களவுமாக  பிடிபட்டதால்
எதுவும் பேசாமல் இடத்தை விட்டு நகர்ந்தாள்.

எனக்கென பிறந்தவன் நீWhere stories live. Discover now