ஆசைப்பட்ட வாழ்கை

2 0 0
                                    

பூனையார் மென் நடையில்,,விழித்துக் கொண்ட சேவலார் குரல் கொடுக்க,!.....
பால்சுரக்க இரவெல்லாம் அசைபோட்ட பசுவோ,,தன் கன்றின் அம்மா என்ற குரல் கேட்டு பதறிஎழ,!........
உழைப்பால் அயர்ந்து தூங்கிய உழவன் வெகுண்டு எழுந்து,ஏர் கலப்பை தோளில்
சுமக்க,!.....
வைக்கோல் உண்ட கலைப்பில்,நீர் அருந்திய காளைகள் பின் தொடர,!…..
செல்லும் அவ்வழியே,,காலை கடனை முடித்த உழவன் குளத்து நீரில் இறங்க,!..
உறங்கிய மீன்கள் கண்விழித்து அல்லி இலைகளை நோக்கி தாவி செல்ல,!...
சலசலப்பால்,மரம்தனில் இருந்த பறவைகள் சிலுத்துக்கொள்ள,!.....
நிலத்தை வணங்கிய உழவன் வயல்தனில் கால்பதிக்க,!....
அசைவினால்,பாம்பின் பிடியிலிருந்த எலியும்,தவளையும் தப்பி ஓட,!....
துண்டினை தலையில் கட்டிய உழவன்,,
எறுதுகளை தொட்டு வணங்கி,!.காலை வேலைதனை தொடங்கும் காட்சியோ,,காட்சி,!.......
குழந்தைகளை பள்ளி அனுப்பிய மனவியோ,!.கணவனின் பசி நேரம் அறிந்து,!.பழைய சோற்று பானையுடன்,
ஊறுகாய்,வெங்காயத்தை இறுககட்டி,!..
நிலத்தை நோக்கி நடக்க,!.
தன்னையும்,மேக கூட்டத்தையும் மாறி,மாறி பார்க்கும் உழவனை கண்ட
சூரியனோ,!.மேகதனிடம் மழையை கொடுக்க பணிய,!....
தான் மட்டும் உண்ண மனம் இல்லா உழவன்,!...பறவைகளுக்கும் பகிர்ந்து விட்டு,,மனைவிக்கும் இரு உருண்டை ஊட்டிவிட,!.வெட்கத்தில் சூரியனோ,!.
மேகத்தில் மறைந்து கொள்ள,!..
மகிழ்ச்சியில் மேகம் மழை கொடுக்க,!...
பள்ளி சென்ற குழந்தைகளும்,மனைவியும்,உழவனும் வீடு வந்து சேரும் வாழ்க்கையே,!.வாழ்க்கை,,,!!!,,,!!,,,!...திருவள்ளுவர் மண்ணிலிருந்து,,,,!...(((rkssa))),,,,,!... 

படித்ததில் பிடித்தது

You've reached the end of published parts.

⏰ Last updated: May 22, 2022 ⏰

Add this story to your Library to get notified about new parts!

வாழ்கை Where stories live. Discover now