41 உடைந்த கட்டில்
இறுதியில், சித்தார்த்தும் ஹரிணியும் ஒன்றானார்கள் இதயத்தாலும், எண்ணத்தாலும், உடலாலும்...! ஒருவருகாகவே மற்றொருவர் என்று படைக்கப்பட்ட அவர்கள் இருவரும், இடையில் வந்த அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து ஒன்றிணைந்து ஆகிவிட்டது. அவர்கள் எதிர்கொண்டது எல்லாம் வெறும் சாதாரண தடைக்கற்கள் அல்ல. ஹரிணியை அடையலாம் என்று சித்தார்த் கண்ட கனவு மொத்தமாய் தவிடுபொடி ஆகி இருந்தது. ஆனால், வாழ்க்கை எப்பொழுதும் எதிர்பாராத பல திருப்பங்களை நம் வாழ்க்கையில் நுழைத்து, நம்மை திக்குமுக்காடச் செய்யும் வல்லமை படைத்தது. அது எப்பொழுதும் நல்லவர்களை கைவிட்டதில்லை என்பது மகத்தான உண்மை.
கட்டிலை விட்டு கீழே இறங்க முயன்ற ஹரிணியை மீண்டும் இழுத்துக் கொண்டான் சித்தார்த்.
"என்னங்க, என்னை விடுங்க"
"நான் என்னை எப்படி கூப்பிட சொன்னேன்?" என்றான் அவள் கீழுதட்டை பற்றிக்கொண்டு.
"சித்..."
"இன்னொரு தடவை அதை மறந்தா, உதை படுவ"
"உதட்டை விடுங்க"
"என்னை எப்படி கூப்பிடனும்?"
"சித்..."
"குட்..."
"போதும் விடுங்க"
"எங்க அவ்வளவு அவசரமா போற?"
"அம்மா கீழ இருக்காங்க... நம்ம கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம ரூம்ல இருக்கோம்"
"நான் ரெண்டு *பெட்டில்* ஜெயிச்சு இருக்கேன் மறந்துடாத"
"அதனால?"
"எனக்கு வேண்டியதை எப்ப வேணும்னாலும் கேட்பேன்"
"இப்ப உங்களுக்கு என்ன வேணும்?"
"ரெண்டு பேரும் சேர்ந்து குளிக்கலாம்"
"என்ன்னன்னது...????" அதிர்ச்சியில் வாயைப் பிளந்தாள் ஹரிணி.
"வாயை மூடு" அவள் வாயில் தட்டினான்.
"நீங்க வெட்கம் இல்லாதவர்"
"இருந்துட்டுப் போறேன்"
"இது ரொம்ப சங்கடமான விஷயம். என்னால முடியாது"
YOU ARE READING
சில்லென்ற தீயே...! ( முடிந்தது)
Romanceவாழ்க்கை எப்படி எப்போது மாறும் என்று யாருக்கும் தெரியாது. அது போகும் போக்கில் செல்ல பழகிவிட்டால் பல ஆச்சரியங்களை அது நமக்கு பரிசளிக்கிறது. அப்படிப்பட்ட பல அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் சந்திக்கும் கதாநாயகனின் கதை...!