முன்னுரை

30 3 7
                                    


சமத்துவம்

இதன் பொருளை அகராதியின் படி நம்மால் கூறிவிட இயலும். ஆனால் நடைமுறையில் இது நமது சமூகத்தில் எந்த அளவு முழுமையாக பின்பற்றபடுகிறது என்பது கேள்விகுறியே.

சமூகம் என்பது நீங்களும் நானும் நமது நட்பும், உறவும் தான். மேடை பேச்சாளர்கள் போல அலங்காரமாய், வாய் தோரணமாய் பேசுவதும், சமூக வலை தளங்களில் பலரின் கவனத்தையும் பாராட்டையும் பெற மட்டுமே சமத்துவம் எனும் துருப்புச் சீட்டை பலர் இப்போதெல்லாம் கையாள்கின்றனர்.

நான் எனது குடும்பத்தில், நெருங்கிய சொந்தங்களில், நட்பு வட்டத்தில், சமூகத்தில் நேரில் பார்த்த சம்பவங்களின் தாக்கத்தால் இந்த குடும்ப வன்முறை - domestic abuse/violence என்ற மைய கருத்தை கொண்ட கதைகளை எழுதி வருகிறேன் (அ) முயற்சிக்கிறேன்.

ஒரு வீட்டின் நான்கு சுவற்றுக்குள், ஒரே கூரையின் கீழ் வசிக்கும் ஒரு குடும்பத்திற்ககுள்ளாகவே எத்தனை பாகுபாடுகள்? இந்த பாகுபாட்டிற்கு பெரும்பாலும் ஆளாவது பெண்களே.

ஆண்களை குடும்பத்தலைவராக/ குடும்பத்தின் மையமாக கொண்ட வாழ்க்கை முறையை பெரும்பாலும் எல்லா நாட்டவருமே பின்பற்றுகின்றனர். அது தவறில்லை.

ஆனால் ஆண்கள் மட்டுமே மதிப்பிற்குறியவர்கள் என்றும், பெண்கள் அவர்களுக்கு ஏவல் செய்ய பிறந்தவர்கள் போலவும், இன்ன பிற இன்னல்களுக்கு ஆளாக்கபடுவதுமே விவாதத்திற்கும் வருத்தத்திற்கும் உரியது.

"ஆமா பொண்ணுன்னா வீட்டையும் புள்ளைகளையும் பாத்துகிறது தான அவ வேலை அதனால என்ன? கொறைஞ்சா போயிடுவீங்கன்னு" கேக்கறவங்களுக்கும்...

"மாமியா, மாமனாரு, புருசன் எல்லாரும் திட்டுறதும் கோவிக்குறதும் சகஜம். இதுக்கெல்லாமா கொடி பிடிப்பாங்க?" என அங்கலாய்ப்பவர்களும்...

"வெளிய வேலை மேல போற ஆம்பிளைங்க கோவத்தை வேலை செய்யிற இடத்துலையா காட்ட முடியும்? நம்மளாண்ட தான் காட்டுவாங்க அனுசரிச்சு தான் போகணும்"
"அடிக்கிற கைதான அணைக்கும்" என சப்பை சால்ஜாப்பு சொல்லும் தாய்மார்களுக்கும்...

நல்லதோர் வீணை செய்தே..Donde viven las historias. Descúbrelo ahora