என்னவன் பகுதி -58

179 7 2
                                    

என்னவன் பகுதி -58

நிஷாந்த் மற்றும் அச்சு வின் இரண்டாம் விருந்து முடிந்து வந்த அன்று தான் ஆதி பெங்களூர் செல்லும் விஷயமும்... நிஷாந்த்தின் மெயில் வந்த விஷயமும் கவியின் குடும்பத்தார்க்கு தெரிய வந்தது...

கவியோ சட்டென்று அதிர்ச்சியாக... நம்ம ஷாரிகாவுக்கோ குஷியோ குஷியாகி போனது...

அனைவர் முன்னிலையிலும் அதை ஆதியிடம் கேட்க... அவனும் ஆமா என்று ஒற்றை வார்த்தையில் முடித்து கொண்டான்....

அதன் பிறகு நடந்த அனைத்து சம்பிரதாயங்களும் மௌனமாக அரங்கேறி அனைவரும் செல்லவும் நேராக தன் அறைக்குள் வந்து ஆதியை அழைத்து அழுது புலம்ப...
ஒரு கட்டத்துக்கு மேல் அவளுடைய அழுகை அவனை வேதனைப்படுத்தவும் தான் செல்லவில்லை என்று சமாதானப்படுத்தினான்...

ஆனால் கவியோ அவனுடைய பதிலை கேட்டு சகிக்க முடியாமல் தன் வேதனையை அடக்கி அவனை பெங்களுர் செல்லுமாறு அனுமதித்தாள்...

அச்சுவின் எக்ஸாம் ஒவ்வொன்றாக நடக்க... நிஷாந்த் பைக்கில் கொண்டு விட்டு அழைத்து வந்து கொண்டிருந்தான்...

இதற்கிடையில் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் ஷாரிகா தன் வேலையை அனைவர் முன்னிலையிலும் கவியை குத்தி நோகடிக்க... பதிலுக்கு சரியாக அச்சுவும் அவள் வாயை அடைத்தாள்...

ஒரு பக்கம் அண்ணன் அச்சு ஆதி போவதை பற்றியும் ஒரு பக்கம் குத்தி நோகடிக்கும் ஷாரிகாவை பற்றியும்
எண்ணி எண்ணி வேதனை கொண்டாள் கவி...

"ஆதியிடம் ஷாரிகா வை பற்றி சொல்லி விடலாம்"என்று ஒரு மனம் எண்ணினாலும் மறுபுறம் "ஊருக்கு போகும் நேரத்தில் வேண்டாம்"என்று மறு மனது கூறியது...

ஏதோ பெயருக்கு சாப்பிட்டு தூங்க முடியாமல் தவித்து போனவளுக்கு அன்றைய தினம் காலையிலே மனதில் உதித்தது"நாளை ஆதி செல்கிறான்.."என்றே...

ஆதியும் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் பேசிஅவளுக்கு ஆறுதல் அளித்தாலும் அவள் மனதில் இருக்கும் வலி அவனுக்கு தெரியாமல் இல்லை..

You've reached the end of published parts.

⏰ Last updated: Jan 06 ⏰

Add this story to your Library to get notified about new parts!

💘💘💘என்னவனே....நீ எங்கு இருக்கிறாயாடா...!!!💘💘💘💕💓💕Where stories live. Discover now