சில்லென்ற தென்றலுடன் நான் உரையாடிக்
கொண்டு மெல்ல நடைப்போட்டு யாரும்
அற்ற சாலையில் அந்தி மாலை வேளையில்
சென்று கொண்டு இருக்கும் போது.......
ராமரின் உருவான உன்னை என் கயல்விழியால்
கண்டு கொண்டேன் இந்த அழகான
அந்தி மாலை வேளையில்....
அக்கணமே நான் யூகித்து விட்டேன் உன்னோடு
தான் என் அழகான இனிவரும் நாள்கள் என்று......
ஒரு ஆண்மகனின் கண்களுக்குள் இவ்வளவு
காந்த அலைகளா.....!
பெண்மையின் நாணலுக்கும் உருவம்
கொடுக்கும் அந்த கண்கள்......!
என் ஜெனமும் அந்த கண்களுக்கு
தான் போலும் என் கண்ணே.....!
என்றும் அன்புடன்........
இலாவண்யா