அவள் படுத்த உடனே உறங்கி விட , மெல்ல தன் கண்களை திறந்து பார்த்தான் அர்ஜுன் படுத்துக்கிடந்த படி, அவனுள் இன்னும் படபடப்பு அடங்கியே பாடு இல்லை , இருந்து அவள் என்ன பண்ணுகிறாள் என்று பார்த்து ஆகவேண்டும் என மெல்ல ஒவ்வரு கண்ணை திறந்து பார்க்க , அவள் நன்றாகா உறங்கி போய் இருந்தாள் , ஹப்பாடா தூங்கிட்டா , நாம பார்த்ததை அவள் பார்க்கவில்லை , ஆமா அப்பிடி யார் அவளுக்கு அவளுக்கு போன் செய்து இருப்பா , கோபமா பேசினா மாதிரி இருந்ததே , யாரை இருக்கும் என யோசித்து ரவிக்கு அழைத்தான் ,
ரவியோ, டேய் உனக்கு மனசாட்சியே இல்லையா என அவனது தூக்கம் தொலைந்து போன எரிச்சலில் கேட்டான்
ஆனால் அர்ஜுனோ , இல்லை , பிசினஸ் பண்ணுறவன் மனசாட்சியோட வேலை பார்த்தா நஷ்டம் எனக்கு தானே , அதான், சரி நான் இப்போ உன்கிட்ட வெட்டி கதை பேச போன் பண்ணல , எனக்கு சில தகவல் வேணும் , உனக்கு கொஞ்சம் நேரத்துல நம்பர் அனுப்பி வைக்கிறேன், அந்த சிம் யாரோடது என்ன எதுன்னு என்ன விவரம் வந்து ஆகணும் என சொல்லிவிட்டு போனை வைத்தான்
ரவி தான் டேய் டேய், நான் சொல்லுறத , என அவன் பேசி முடிப்பதற்குள் வச்சுட்டானா , நம்ம பேசுறதை கேட்கிறதே இல்லை, இவன் சொன்னா மட்டும் நான் செய்யணுமா , முடியாது நீ படுத்து தூங்கு டா ரவி என தனக்கு தானே சொல்லிவிட்டு படுக்க போக , அர்ஜுன் மீண்டும் அழைத்து, செய்ய முடியாதுன்னு தூங்கணும் நினச்சா, பார்ட்னெர்ஷிப் கான்செல் பண்ணிடுவேன் பார்த்துக்கோ , அப்புறம் எல்லாம் சேர்த்து லீகல் ப்ரோப்லேம் கூட நீதான் சமாளிக்கணும் , எப்பிடி வசதி , என அர்ஜுன் அசராமல் கேட்க
ரவி பல்லை கடித்த படி, நான் நீ சொன்ன வேலையே பார்க்க கிளம்பி அரைமணி ஆச்சு , நீ சரியான விவரம் மட்டும் அனுப்பிவை என சொல்லிவிட்டு போனை வைத்தான் .
மனதுக்குள் பைத்தியக்காரனுக்கு எல்லாம் பிரெண்டாவே இருக்க கூடாது , இப்போ பாரு நம்ம தூக்கம் போச்சி என புலம்பியே படி அர்ஜுன் குடுத்த வேலையே பார்க்க சென்றான்.
YOU ARE READING
பொய்யில் புலர்ந்த புது உறவு
Romanceபொய்யில் புலர்ந்த புது உறவு - கண்டிப்பான குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டு இருக்கும் பெண் இவள், அதற்க்கு காரணம் அவளது மருத்துவ துறை தான் , ஆம் இவள் மகப்பேறு மருத்துவராக ஒரு தனியார் மருத்துவமணையில் பணி புரிகிறாள்...