!! 22 !!

15 0 0
                                    

அவள்  படுத்த உடனே  உறங்கி விட ,   மெல்ல  தன்  கண்களை  திறந்து பார்த்தான் அர்ஜுன் படுத்துக்கிடந்த படி,  அவனுள்  இன்னும்  படபடப்பு  அடங்கியே பாடு இல்லை , இருந்து   அவள்  என்ன பண்ணுகிறாள் என்று  பார்த்து ஆகவேண்டும் என மெல்ல  ஒவ்வரு  கண்ணை  திறந்து பார்க்க ,  அவள் நன்றாகா உறங்கி போய் இருந்தாள்  ,  ஹப்பாடா   தூங்கிட்டா  , நாம பார்த்ததை அவள் பார்க்கவில்லை ,  ஆமா அப்பிடி  யார் அவளுக்கு அவளுக்கு போன் செய்து இருப்பா , கோபமா  பேசினா மாதிரி  இருந்ததே , யாரை இருக்கும்  என   யோசித்து  ரவிக்கு அழைத்தான் ,  

ரவியோ,  டேய்  உனக்கு  மனசாட்சியே இல்லையா     என அவனது  தூக்கம்  தொலைந்து போன எரிச்சலில் கேட்டான் 

ஆனால்  அர்ஜுனோ , இல்லை ,  பிசினஸ் பண்ணுறவன்  மனசாட்சியோட வேலை  பார்த்தா  நஷ்டம்  எனக்கு  தானே ,  அதான்,  சரி  நான் இப்போ உன்கிட்ட வெட்டி  கதை பேச  போன் பண்ணல , எனக்கு  சில தகவல்  வேணும் , உனக்கு கொஞ்சம் நேரத்துல  நம்பர் அனுப்பி  வைக்கிறேன்,  அந்த சிம்  யாரோடது என்ன எதுன்னு  என்ன விவரம்  வந்து ஆகணும் என சொல்லிவிட்டு போனை  வைத்தான் 

ரவி தான் டேய்  டேய்,  நான் சொல்லுறத ,  என அவன்  பேசி முடிப்பதற்குள் வச்சுட்டானா  , நம்ம பேசுறதை  கேட்கிறதே இல்லை, இவன்  சொன்னா  மட்டும் நான் செய்யணுமா  , முடியாது  நீ படுத்து தூங்கு டா  ரவி  என   தனக்கு  தானே  சொல்லிவிட்டு படுக்க போக , அர்ஜுன் மீண்டும் அழைத்து,  செய்ய முடியாதுன்னு தூங்கணும்  நினச்சா,  பார்ட்னெர்ஷிப் கான்செல் பண்ணிடுவேன்  பார்த்துக்கோ , அப்புறம் எல்லாம் சேர்த்து  லீகல் ப்ரோப்லேம் கூட நீதான் சமாளிக்கணும்  , எப்பிடி  வசதி ,  என அர்ஜுன் அசராமல் கேட்க   

ரவி பல்லை கடித்த படி,  நான்  நீ சொன்ன வேலையே பார்க்க  கிளம்பி  அரைமணி   ஆச்சு , நீ சரியான விவரம் மட்டும் அனுப்பிவை  என சொல்லிவிட்டு  போனை  வைத்தான் . 

மனதுக்குள் பைத்தியக்காரனுக்கு எல்லாம் பிரெண்டாவே  இருக்க கூடாது , இப்போ பாரு நம்ம தூக்கம் போச்சி என புலம்பியே படி  அர்ஜுன் குடுத்த வேலையே பார்க்க சென்றான்.

பொய்யில் புலர்ந்த புது உறவுWhere stories live. Discover now