ரகஸ்யம் - Secret golden desert
மாமல்லபுரத்திலிருந்து தஞ்சை நோக்கி கிளம்பியதும் அவனுக்கு துணையாக வந்தவன் யஷ்வந்த். ஆனால் உடன் இருப்பவர்களுக்கு ஏன் அவனுக்கே கூட அவன் பெயர் மறக்குமளவு Stoneman என்று தான் அவனை அழைப்பதுண்டு. காரணம் அவன் உடல் வலிமை பற்றியதல்ல கடவுள் அவனை படைத்த போது உணர்ச்சிகளை அவனுள் வைக்க மறந்துவிட்டார் போலும். எல்லா நிகழ்ச்சிக்கும் அவனிடம் இருந்து வெளிப்படும் ஒரே முகபாவம் மற்றவர்களுக்கு சலிப்பை தரும். அவனும் மற்றவர்களிடம் அவ்வளவாய் பழகுவதில்லை. சிறு வயது முதல்தோழன் என்பதால் யஷ்வந்த் பற்றி சந்துரு அதிகமாகவே தெரிந்து வைத்திருந்தான்.அதனால் தான் நம்பிக்கையோடு அவனை இந்த பயணத்திற்கு அழைத்தான். யஷ்வந்த் வீட்டில் சந்துருவிற்கு ஏகப்பட்ட மரியாதை. ஒரே ராஜ உபச்சாரமாக இருக்கும். ஆனால் அவன் வீட்டில் எல்லோரும் துப்பறியும் நிபுணர் போல விறைப்பாகத்தான் இருப்பர். அவன் வீட்டில் விளையாடும் போது இவன் ஏதேனும் உடைத்தால் கூட திட்டு யஷ்வந்த்திற்கு தான்.ஆனாலும் யஷ்வந்த் கோபப்படமாட்டான். அது அவன் நட்பிற்கு கொடுக்கும் மதிப்பு. ஒரே ஒரு ஆச்சர்யம் அந்த பயணத்தில் எனில் அது மகிழின் வரவு.
ஸ்கூல் டூருக்கே அவன் வர மாட்டேன் என பயப்படுவான். ரூர் வேண்டாம் விளையாட playground கூட அவன் வர மாட்டான். ஆனால் இந்த கல்லூரி வாழ்க்கை அவனுள் ஏகப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. அவன்
philosopy யில் பட்டப் படிப்பு முடித்திருந்தான். கடைசியாக அவர்கள் சிவப்பு நிற ஜாகுவர் காரில் கிளம்பிய போது மூன்று பேராக சென்றால் காரியம் உருப்புடாது என யாரோ சத்தமிட்டனர்.
"அவ்வளவுதானே" என மகிழ் கேட்டு விட்டு ஒரு கழுகையும், ஆந்தையையும் எடுத்துக் கொண்டு வந்தான். மகிழின் மாற்றங்கள் உச்சத்தை தொட்டு விட்டதாய் மற்றவர் இருவரும் எண்ணிக் கொண்டனர். அதை விட பேராச்சர்யம் அந்த இரண்டு பரம எதிரி பட்சிகளும் ஒன்றை ஒன்று கண்டு கொள்ளாதது போல கிடந்தது தான்.
YOU ARE READING
ரகஸ்யம்
Adventureகல்லூரியில் ஆர்க்கிடெக் படிக்கும் மாணவன் சந்துரு தஞ்சை பெரிய கோவிலின் ரகசியத்தை கண்டறிய முற்படுகிறான். அவனோடு நன்பன் மகிழ் தன் முன்னோரை பற்றி அறிய தஞ்சை செல்கிறான்.அமானுஷ்யமான பல நிகழ்வுகளை அவன் கண்டறிகிறான். அவன் கற்பனை என நினைத்த மாந்ரீகம் பல...