💔1💔

5.8K 171 178
                                    

அன்று வெகு சீக்கிரமாக வேலை முடிந்து விட்டதால், மாலை ஐந்து முப்பது மணிக்கே தனது அப்பார்ட்மென்டுக்கு திரும்பினான் சித்தார்த்.

இரண்டாம் தளத்தில் உள்ள தன் வீட்டை நோக்கி செல்லும் அவனைப் பற்றிய சிறு அறிமுகம்.

சிவில் இன்ஜினியரிங் முடித்த தகுதியோடு ஒரு தனியார் நிறுவனத்தில் திறமையான இன்ஜினியர் என பெயர் பெற்று வாழ்வில் முன்னேறிக் கொண்டிருக்கும் இருபத்தொன்பது வயது சராசரி இளைஞன்.

பிறந்து இரண்டே நாளான கைக்குழந்தையாக சாரதா இல்ல ஆசிரமத் தொட்டிலில் அநாதையாக கண்டெடுக்கப்பட்டு வளர்ந்தவன்.

தன் நிலையை எண்ணியோ அல்லது தாய், தந்தைக்காகவோ ஒரு நாளும் அவன் ஏங்கியதேயில்லை. தன்னை வேண்டாமென்று விட்டு சென்றவர்களுக்காக வருந்தி இருக்கின்ற பொழுதையும், அமைதியையும் ஏன் இழக்க வேண்டும் என்கின்ற எண்ணம் கொண்டவன்.

வாழ்வின் நிதர்சனங்களை உளமாற அப்படியே ஏற்றுக் கொள்பவன். ராமக்கிருஷ்ணர், விவேகானந்தரின் போதனைகளால் கவரப்பட்டு அதைப் பின்பற்ற முயலுபவன். கல்வி கற்கும் திறமைகள் இருந்தும் வாய்ப்புகள் இல்லையே என்று புலம்பி நேரத்தை வீணடிக்க விரும்பாதவன். தன் உழைப்பாலும், திறமையாலும் இலக்கை அடைய முடியும் என்ற உத்வேகம் கொண்டவன்.

சித்தார்த்! தனது லட்சணமான, சாந்தமான முகத்தாலும், குணத்தாலும் அனைவரின் மனதையும், தோழமையையும் மிகச் சுலபமாக வென்று விடுபவன்.

கதவை திறந்து உள்ளே நுழையும் இந்த ஃபிளாட் அவனுடையது அல்ல. அவன் நண்பன் ஒருவன் இந்த ஃபிளாட்டை ரீசேலில் புதியதாக வாங்கி நான்கு மாதம் தான் ஆகிறது. அவன் அதிர்ஷ்டம் இதை வாங்கிய நேரம் அவனுக்கு வேறு ஊருக்கு மாற்றலாகி விட்டது.

வாங்கிய வீட்டை பூட்டி வைக்கவும் மனமில்லாமல் வாடகைக்கு விடவும் மனமில்லாமல் இரண்டுக்கும் இடையில் குழப்பத்துடன் தள்ளாடிக் கொண்டிருந்தவன் இறுதியில் தன் நண்பனான சித்தார்த்திடம் கெஞ்சி கூத்தாடி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தான் அவனை அவ்வீட்டில் குடியேற வைத்திருந்தான்.

நானொரு சிந்து...Unde poveștirile trăiesc. Descoperă acum