உயிர்-12

4.6K 173 37
                                    

லாவண்யாவின் உடம்பெல்லாம் நடுங்கியது.அதற்குள் ரவி , வா குட்டி பிசாசு என்றான்.

      லாவண்யாவிற்கு அப்படியே மறைந்து விடமாட்டோமா என இருந்தது. சிவா மெதுவாக அவள் முக அசைவுகளை நோட்டமிட்டு கொண்டு இருந்தான்.

    ரவி campus interviewல் வேலை கிடைத்ததை கூறினான்.லாவண்யா எங்க அண்ணனுக்கு பொறுப்புலாம் வந்திரிச்சி அப்படியே அம்மாவிடம் சொல்லி சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கனும் என்றாள்.

      ரவி போ லூசு என்று வெட்கப்பட ஓய் யாரயாவது லவ் பண்றியா என கோரஸாக கேட்டனர் சிவாவும் லாவண்யாவும்.

   அதற்கு அவன் ஆமா  உன்ன தான் என லாவண்யாவை காட்ட சிவா முகத்தில் மின்னல் வெட்டியது.காலையில தங்கச்சி தான சொன்னான் என குழம்பி கொண்டு இருக்கும் போது லாவண்யா சிரித்து கொண்டே அடுத்து என்றாள் அதற்கு ரவி எங்க அம்மா,அப்பா முக்கியமாக இந்த ரொட்ல போற  நாய்,பூனை,குரங்கு என கூறி கொண்டே போக அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.சிவாவிற்கு இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது லேட்டாக தான் புரிந்தது.

    அவன் மட்டும் தனியாக சிரித்தான். அவனது அனைத்து முக மாற்றங்களை யும் லாவண்யா கவனிக்க தவறவில்லை.

உயிரின் உயிராய்Where stories live. Discover now