கடல் ராஜா

441 45 37
                                    

சூரியன் உதயமாக இன்னும் நான்கு நாழிகையே இருக்க அந்த வைகறைப் பொழுதில் மந்தாகினி பிரம்மை பிடித்தவள் போல் கடற்கரையில் நாடிருந்த கம்பில் தலை சாய்த்து அமர்ந்து கண்முனிருந்த கடலை வெறித்து கொண்டிருந்தாள்.

சற்று முன் இருந்த கொந்தளிப்பும் நீர் சுழற்சியும் அடங்கி அமைதியாக இருந்த கடலை பார்க்கும் போது அவள் உள்ளம் குமுறியது.

"இளவரசி.... உங்களை அழைத்து வர மகாராஜா உத்தரவு பிரபித்துள்ளார்..."
என்று அவளது பணிப்பெண் கூற
தான்னிருந்த நிலையில் இருந்து சிறிதும் அசையாமல்

"முடியாது என்று சொல்..."
என்றாள் தீர்க்கமாக..

அவள் கூறியதை கேட்டு கவலையோடு லேசாக தலையசைத்தவள் அரண்மனையில் இருந்து வந்த ஆட்களிடம் தெரிவிக்க அவர்கள் மீண்டும் புரவியை கிளப்பி சென்றனர்.

அந்த கடற்கரையில் அவள் மட்டும் இல்லை.அவளது பாதுகாப்பிற்கு காவலர்களும் பணிபெண்களும் சற்று தள்ளி அந்த தெப்பங்குடி மக்களும் இருந்தனர்.ஆனால் மந்தாகினியின் கண்ணிலும் சரி கருத்திலும் சரி அவை பதியவில்லை.அவளுக்கு தெரிந்தது எல்லாம் கடலும் அதில் சற்று முன் மறைந்த செழியனும் தான்.

'இது எப்படி சாத்தியம் ஆகும்...'

'என் செழியன் சொன்னதை செய்பவனாயிற்றே...'

'இது எப்படி நடக்கும்...'

என்று அவள் மனம் துடிக்க பின்னால் ஊர் மக்கள் பேசிக் கொள்வது காற்றி கலந்து இளவரசியின் செவியில் பாய்ந்து.

"ஆமாம்... ஆமாம் நானும் பார்த்தேன்.. அந்த நீர் சுழற்சியில் சிக்கிய செழியனின் படகு எவ்வளவு நேரம் தாக்குபிடித்து.. ஹப்பா... என்னே துணிச்சல் நம் செழியனிற்கு!!!.."
என்று அவர்களுள் ஒருவன் வியக்க

"என்ன பெரிய துணிச்சல்... அதான் கடைசியில் சிக்கி கடலில் மூழ்கியதை பார்த்தாய் அல்லவா..."
என்று மற்றொருவன் ஏளனமாய் நகைக்க

"ம்ம் ஆமாம்... அவன் நீச்சல் கலையில் வல்லவனே என்றாலும் நடுக்கடலில் அதுவும் சுழற்சியில்​ இருந்து நீந்தியே வருவது சாத்தியமே அல்ல..."

கடல் ராஜா[Kadal Raja]Where stories live. Discover now