😇karai nallathu😇

174 13 27
                                    

                      ஒரு அழகான கிராமம். அந்தக்கிராமத்தின் தலைவருக்கு ஒருபெண் இருந்தாள்.அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும்பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச்சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்காதலிக்க ஆரம்பித்துவிட்டாள். இது தெரிந்ததும் மொத்தகிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழிதெரியாத காதல் ஜோடி ஊரைவிட்டு ஒடதீர்மானித்து ஒருநாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர்.உடனேஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்தேடியது. இருந்தும் அவர்களால்கண்டு பிடிக்கவே முடியவில்லை.
            அதன் பிறகு அவர்கள்அந்த்க்காதலை ஏற்றுக்கொள்ள முடிவுசெய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப்பார்த்த காதல் ஜோடி உடனே ஊர்திரும்பியது. சந்தோஷப் பட்டஊர்மக்கள் அந்தக்காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்யமுடிவு செய்தனர்.திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச்சென்றிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரிமோதி அந்த வாலிபன் அந்தப் பெண்எதிரிலேயே உயிர்துறந்தான்.உடனே அந்தப்பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள்.
              
             ரொம்ப நாட்களுக்குப்பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்துவந்தாள். திடீரென்று ஒரு நாள்அப்பெண்னின் தாய் ஒரு கனவுகண்டாள்.அதில் ஒரு தேவதை தோன்றி அவள்மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும ்என்றது, இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கைசெய்தது.அவள் தாய் கனவை மதிக்கவில்லை.அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்னின ்தந்தையிடமும் கனவில ்எச்சரித்தது.ஆனால் அவரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. அடுத்த நாள் அப்பெண்னின ்கனவிலேயே தோன்றிஎச்சரித்தது.அவள் உடனேதாயிடம் கனவைப் பற்றிக்கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள்.உடனே அந்தப் பெண்னும்அதைத்துவைத்தாள்.இருந்தும் தேவதைமறுபடியும் அடுத்த நாள்கனவில்வந்து கறை சரியாகப்போகவில்லை என்று எச்சரித்தது.மறுபடியும் அப்பெண் அத்துணியை துவைத்தாள். இருந்தும் கறை போகவில்லை.அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்பெண் கதவைத்திறந்தாள்.அப்போது கனவில்வரும் அதே பெண் நின்றுகொண்டிருந்தாள். அவள் முகம்கனவில் வருவதைப்போல் கனிவாக இல்லாமல ்வெளிறிப் போய் இருந்தது.உடனே இவள் பயத்தினால்அலறினாள்.அந்தத் தேவதை கோபத்துடன்கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப்எக்ஸல் போடு கறை போயிடும்"என்றது.்..😂😂😂😂😂

You've reached the end of published parts.

⏰ Last updated: Oct 24, 2017 ⏰

Add this story to your Library to get notified about new parts!

😎Karai Nallathu😎Where stories live. Discover now