ஆசையாய் நான் வளர்த்த செடியில்
துளிர்விட்டு மொட்டு
மலருமுன்னே
கண்முன்னே பட்டுபோனதடி...!நெடுதொலைவில் சென்று குடிநீர்
சேகரித்தேன் என் ஒருதுளி கண்ணீர்
அருந்த விடாமல் செய்ததடி...!பார்த்து பார்த்து சமைத்து வைத்து
பந்தியிடுமுன்னே
விஷமாக போனதே ஏனடி...!சூடும் பூக்களும் மனம் வீசவில்லை
நெற்றி குங்குமத்திலும் முகம் ஜொலிக்கவில்லை. ..
மஞ்சள் கயிறு மட்டும் நிஜமாகிடுமா..?கனியும் காலகாலத்தில் விதையிட்டு
செல்கிறது. ..
கன்னியின் விதியோ விரகோடு
முடிவானது...!அடுத்த ஜனனம் ஒன்றிருந்தால்
அதிலாவது துயர் இல்லா
வாழ்க்கை வரமா வேண்டுகிறேன்...!இனிப்பும் கசந்து போனதடி
இன்னல்கள் நிறைந்த இதயவலியில்...!தலைமகளாய் போன பெண்ணின்
விதியில்
ஆசைகள் அனைத்தும் கனவில்
அன்றோ...!நெருங்காதீர் எல்லாத்தையும்
புதைத்து விட்டேன்...!💔💔💔
YOU ARE READING
கண்ணீரின் தாகம்
Poetry"கண்ணீர்" பெண்களுக்கும் ...ஏழைகளுக்கும் மட்டுமே சொந்தம் என்று நினைப்பது முட்டாள்தனம். .. வலி ஏற்க்கும் ஒவ்வொரு இதயங்களின் சொந்தம் என்று கூறலாம். ..!