மகளிர் தின வாழ்த்துகள்
அன்புத் தோழியே நீ இம்மண்ணில் மங்கையராக பிறந்தது சமையலறையில் அடைக்கப்படுவதற்காக அல்ல
இவ்வுலகையே தன் கைவசப்படுத்துவற்காக
அன்னை தெரசாவைப் போல் அனைவரிடமும் அன்பு காட்டு
முத்துலெட்சுமி ரெட்டியை போல் என்றும் அறிவுத்திறனுடன் செயல்படு
சரோஜினி நாயுடுவைப் போல் வீரமுடன் போராடு
குடும்பத்தை மட்டும் அல்ல
இப்பிரபஞ்சத்தையே கட்டிக்காக்கும் சக்தி மங்கையருக்கே அதிகமுண்டு
_ மு.ச.செந்தில் குமார்