❤கானல்-33❤

1.7K 107 26
                                    

"என்னங்க சனாவுக்கு ஏதோ வெளிய தேவை ஒன்னூ இருக்காம் அவ கூட போறதற்கு என்னையும் கூப்ட்றா நான் போகட்டுங்களா?" என்று தமிழிடம் கேட்டதும்

"அப்போ வினோ கூட புது வீட்டுக்கு போக வர மாட்டியா"

"இல்லைங்க சனாவுக்கு ரொம்ப முக்கியமாம் இன்னைக்கு இல்லேன்னா நாளைக்கோ நாளன்னைக்கோ நாம வினோ அண்ணா வீட்டுக்கு போயிக்களாம் தானே இது அப்டில்லைங்க"

"நீ மட்டும் போகாத சனா கூட இரண்டு பேரும் சின்னவங்க" என்றான் தமிழ்

"சுமதி அக்கா நான் சனா மூனு பேரும் போவோம்ங்க"

"சரி போயி  வினோகிட்ட சொல்லி பர்மிஷன் வாங்கிக்கோ இல்லைன்னா கோவ படுவான்"

"ஹம்" என்று முனகிக்கொண்டே சென்றவள்
வினோதிடம் சென்றதும்

"வினோ அண்ணா நான் சனா கூட முக்கியமான விஷயமா வெளிய போறேன் ஸோ உங்க கூட புது வீட்டுக்கு வர முடில்லைண்ணா"

"எனக்கு தெரியும் ப்ரியா நீ போற காரியம் நல்லாவே நடக்கும் நீ போயிட்டு வா" என்றான் சுரேஷீன் மீது மெல்லிய பார்வையை வீசிவிட்டு

ஒரு நாளும் இல்லாது ஹாஷு இப்படி வெளியே செல்வதும்? அதுவும் கூட பரவாயில்லை வினோ தன்னிடம் பேசாமல் இருப்பது? மட்டும் இன்றி சுரேஷை ஓர பார்வை பார்த்து விட்டு ஹாஷுவிடம் பேசியது?  எதுவும் சாதரணமாக படவில்லை தமிழிற்கு

தமிழ் கபடமற்றவன் மனதில் ஒன்றை வைத்து வெளியே பேச தெரியாதவன் வினோவிடம் நெருங்கி

"ஏதாச்சும் பிரச்சிணையா வினோ?" என்று கேட்டான் சிரித்த முகமாக நின்ற வினோ அவனை ஆழ்ந்து பார்த்து விட்டு "நீ கேட்குற கேள்வி புரியுது அதற்கான பதில்...

இது ஒன்னும் இன்னைக்கோ நேற்றோ நடந்த பிரச்சிணையில்ல பல வருஷங்களா நடந்துட்டு இருக்குற பிரச்சிணை உன்கிட்ட சொன்னா புரிஞ்சிக்க மாட்டன்னு சிலரும் பிரிஞ்சிடுவோமோன்னு பலரும் சொல்லிட்டு பிரிஞ்சி போனவங்கன்னும்...
எல்லாரும் இங்க இருக்கு நான் கூட இவ்ளோ நாள் உன் நட்புக்கு துரோகம் பன்னிட்டேன் தான் பட் இன்னைக்கு சொல்வேன்"

கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது)Where stories live. Discover now