என்னவன்44😍💕

1.8K 69 11
                                    

சிவாவுக்கும் சௌமிக்கும் பெரியோர் முன்னிலையில்  திருமணம் நடந்து முடிய ஊரே அவர்களை வாழ்த்திச் சென்றது...
சடங்கு சம்பிரதாயம் என அது ஒரு பக்கம் நடந்து கொன்டே இருந்தது.. பெண் பார்க்கும் படலம் மற்றும் ஓய்ந்தபாடில்லை..

திருமணத்துக்கு சொன்னவர் சொல்லாதவர் என அனைவரும் ஒருவர் பின் ஒருவராகப் பார்த்து விட்டு சென்றனர்.. அவர்களுக்குள்ளவே அழகா இரூக்காள்ளப் பொண்ணு என்றுப் பேசிக் கொண்டேச் சென்றார்கள்..

இப்படியே இரவாகி போக பவித்ரா சௌமியை அழைத்து வருவதற்காக சந்தியா வீட்டிற்கு வர," அவளோ  சௌமிக்கு வந்ததில் இருந்தே ரெஸ்டே இல்லம்மா... பாவம் அதுனால ஒரு மூணு நாளைக்கு நான் இங்கேயே வச்சிருந்து அனுப்புறேனே" என்றாள்.. 

"அவளும் இன்னும் யார்கிட்டயும் அவ்ளோ ஒட்டல".."அவக் கொஞ்சம் இயல்பானதும் சூழ்நிலைக்கு பழகுனதும் அனுப்பி வைக்கிறேனே" என்று சொல்ல பவித்ராவிற்கும் அது சரி என்றுப்பட்டது..

அந்த தகவலை இருவரிடமும் சொன்னதும் சௌமிக்கு, " அப்பாடா நம்ம நினைச்சத அவங்களே சொல்லிட்டாங்களே" என்று இருந்தது.. ஆனா இங்க சிவாவோட நிலைமை தான் அய்யோ பரிதாபம்.. 

அன்றைய நாள் அப்படியேக் கழிந்தது..
சந்தியா வீடு சௌமியின் தாய் வீடாக மாறிப்போனது.. மகாலட்சுமியின் அறைவணைப்பில் கொஞ்சம் அவள் குடும்பத்தை பற்றியக் கவலையும் கரையத் தொடங்கி மனதளவில் கொஞ்சம் தேறி இருந்தாள்.. 

சிவா சாப்பிடுவதற்கு சந்தியா வீட்டிற்கு தான் வருவான்.. அங்கு அவனை கொஞ்சம் நேரம் கூட சௌமிக் கூட பேச விடாது ஒவ்வொருவராக வந்து கிண்டல் செய்துக் கொண்டே இருப்பார்கள்.. சரி தெரியாமலாவது பார்த்துட்டு போயிருவோம் என்று மறைந்து மறைந்து வந்து சௌமியை பார்க்க... எங்கிருந்து தான் வருவார்களோ, "யாராச்சும் வந்து அவன் மறைந்திருப்பதைப் பார்த்து அவனை கிண்டல் பண்ண ஆரம்பித்துவிடுவார்கள்".. அதை பார்க்கும் சௌமிக்கோ வெட்கம் கொள்ளைக்கொள்ளும்.. அவளுக்கு அது பிடித்திருந்தது..

என்னவன் 😍💕 (Completed)Where stories live. Discover now