சந்திப்போமா..?-25

3.3K 89 25
                                    

                         

இரத்த ஆற்றில் கிடந்தாள் சுமித்ரா  ஓடி வந்த கயல் ஒரு நொடி அதிர்ந்தாளும்  சுதாகரித்து

தொப்பென்று சுமியின் அருகில் விழுந்து

"அன்னி என்ன அன்னி இது"

"அன்னி பேசுங்கன்னி பயமுடுத்த வேண்டாமன்னி"

"அன்னி பேசு" என்று கொஞ்சம் சத்தமாக கூறியவள்

"அய்யோ சுமி பேசு என்ன பாரு"  என்று கூறி கதறினாள்

"அய்யோ  என்னால தான் எல்லாமே என்னால தான்" என்று கதறி அழுதாள்

கயலின் கதறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மூவரும் ப்ரீஸ் ஆகி இருந்தனர்

கயல் மட்டும் தான் அழுது தள்ளினாள்
சத்தம் கேட்டு ஓடி வந்த ஜகேந்திரன் சுமியை கண்டதும் நெஞ்சை பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டார் யாருமே பேசவில்லை

கயல் அழுது அழுது தள்ளினாள் திடீர் என்று குணாவின் ஞாபகம் வர உடனே அவன் முகம் பார்த்தாள் அவன் மரம் போன்று கண் இமைக்காது பார்த்து நின்றான் உடனே எழுந்த கயல் அவனை கட்டி பிடித்து கொண்டாள்

"அண்ணா" என்று அவன் கன்னத்தை தட்டியதும் தொப்பென்று கீழே விழுந்து விட்டான்

ஜானகி தேம்பி தேம்பி அழுக ஆரம்பிக்க வரதன் கல் போன்று அழுகாது இவ்வளவு நாட்கள் இருந்தவன் அத்தையின் மருமகளுக்காக அழுதான்

அது அத்தையின் மருமகள் என்ற உறவே அவனுக்கு ஞாபகமில்லை அக்கா போன்று தான் நினைத்து இருந்தான்

"அய்யோ அக்கா என்னக்கா இது என் காதல என்கிட்ட கொடுத்து என்ன சிரிச்சி சந்தோசமா வாழுன்னு சொல்டு நீங்க இப்டி கிடக்குறீங்க நாங்க இனி எப்டிக்கா வாழ்வோம்" என்று கேட்டே விட்டான் வாய் விட்டு

ஜானகியை கட்டி கொண்ட கயல் தேம்பி தேம்பி கண்ணீரில் கரைந்தாள்

ஜகேந்திரன் எழுந்தூ சென்று சுமியின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தான் 
அருகில் எழுந்து வந்த வரதன் "மாமா செலவுக்கு" என்கும் போதே அவன் மார்பில் தலை சாய்த்து விட்டார்

சந்திப்போமா (முடிவுற்றது)Where stories live. Discover now