ஒற்றைப் பார்வையில்
உலகம்
மறக்குமா....????
என்று தோழியின் கூற்றை
நகைத்தேன்....!!!!
காதலனின் ஒரு சொல்லில்
மனம்
பணியுமா....????
என்று அறிவுரை
உரைத்தேன்.....!!!!
அவன் கைத் தீண்டலில்
உடல்
சிலிர்க்குமா.....?????
என்று எகத்தாளம்
புரிந்தேன்....!!!!!
ஒரு ஆணிடம்
தோற்பதா.....?????
என்று அகங்காரம்
கொண்டேன்....!!!!
உன்னை பார்த்த
பின்பு நான்........!!!!!
ஒற்றைப் பார்வையில்
உலகம் மறந்தேன்..........!!!
உன் ஒரு சொல்லில்
மனம் பணிந்தேன்.........!!!
உன் கைத்தீண்டலில்
உடல் சிலிர்த்தேன்........!!!
உன்னிடம் தினம்
தினம் தோற்கிறேன்.....!!!
உன்
மேல்
கொண்ட
காதலால்......