Butterfly - 03

3.4K 138 47
                                    

சகோதரனாய் ஒருவன்,

தோழனாய் ஒருவன்,

என் வாழ்வில் வந்த 

இரு அழகிய துருவங்கள்.

மூன்றாவது துருவமாய் 

வருவாளா அவள்?

சில நாட்களின் பின் ஸ்ரீதர் கைகளில் கட்டுடன் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்தான். அவன் தடுமாறும் வேளை உதவி செய்ய வந்த மூர்த்தியை சந்தர்ப்பத்துக்கு கூட தவிர்த்தான். இதைப் பார்த்ததும் வருந்திய கவின் வரவேற்பறைக்கு வந்ததும்,

"டேய், ஏண்டா... உன் அப்பா உன் மேல இருக்கற பாசத்துல தானேடா உன் கூடவே இருக்க ஆசப்பட்றாரு. அவர ஏண்டா அவொய்ட் பண்ற?" என்க அவனை ஒரு பார்வை பார்த்த ஸ்ரீதர்,

"ஹ்ம்... உனக்கு தெரியாததா? என் அம்மா இறந்ததுக்கப்றம் நான் கூட இவர மட்டும் தான் என் உலகம்னு நெனச்சன். ஆனா இவரு என்னப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம வேற ஒருத்தவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. ஆனா அப்போ கூட நான் அவங்கள என் அம்மாவா தான் நெனச்சன். ஆனா அவங்க... ஹ்ம், எனக்கு ஒரு சித்தியா கூட நடந்துக்கல. நான் சின்ன வயசுல எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு தெரியுமா? அந்த வலியும் வேதனையும் யாருக்கும் புரியாதுடா. நான் நேசிக்குறவங்க எப்பவுமே என்கூட இருக்கரதில்லடா. அம்மா பொய்ட்டாங்க, அவரும் பொய்ட்டாரு. இப்போ நான் உயிரையே வச்சிருந்த அவளும் பொய்ட்டா, கூடிய சீக்கிரத்துல நீயும் கல்யாணமாகி போய்டுவ."

என விரக்தியோடு கூறினான். அதை கேட்ட கவினுக்கு கோபம் வந்தாலும் கூட அவனருகில் சென்று நின்று,

"ஆமாண்டா, நான் கல்யாணமாகி போயிருவன். ஆனா உன்ன தனியா விட மாட்டன். உனக்குன்னு ஒருத்தி வந்ததுக்கப்றம் தான் என் கல்யாணம்."

என்றதும் ஸ்ரீதர் அவனை முறைத்துப் பார்த்து விட்டு அறைக்குள் சென்றான். ஸ்ரீதரின் அறை மொத்தமாக மாறியிருந்தது. நிறப்பூச்சு, பொருட்கள் சுவர்களிலிருந்த படங்கள் எல்லாமே புதிதாய் இருந்தது.

காதல் ஒரு Butterfly அ போல வரும் (Completed)Where stories live. Discover now