என் மனம்

78 7 5
                                    

ட்க் டக் ட்டக்க...

"யாரு டா அது..." என கேட்க...

நான் தான் உன் மனசு....

"நினைச்சேன் டி வா டி வா.. அதெப்படி நான் ஸ்ட்ராங்கா ஒரு முடிவு எடுத்த உடனே வந்து கதவை தட்டற... அதும் ஒருத்தர், இரண்டு பேரு எல்லாம் வரது இல்லை கும்பலா வரது ஆளுக்கொரு கேள்வியை கேட்க வேண்டியது அதுக்கு  நீங்களே பதில் சொல்ல வேண்டியது.. ஓடி போங்க...'

"நீ எங்களை தப்பா நினைச்சுட்டு இருக்க.. நான் உனக்கு நல்லது தான் பண்ணுவேன்.. எல்லாம் சொன்னது இல்லையா..

'யாரு நானா..!!  இந்த விஷயத்தில நீ சொல்றது முதல்ல சரியாதான் எனக்கு தோணும்.. ஆனால் உன் விஷயத்தை நான் கேட்டன்னு வையேன் நான் இனிமே நல்லாவே இருக்க மாட்டேன்.. முக்கியமா இந்த காதல் விஷயத்தில  நான் உன் பேச்சை கேட்டேன் நான் உருப்படவே மாட்டேன்.."

"என்னப்பா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட..நான் உனக்கு நல்லது தான் சொல்லுவேன்..'

"ஆமா நீ எப்படி வந்த..'

"மனகதவு வழியாக.."

"அந்த மனகதவை இழுத்து மூடிட்டு அப்படியே ஓடி போ.. இனிமே இந்த காதல் கத்திரிக்காய் விஷயத்துக்கு எல்லாம் பஞ்சாயத்து பண்ண வந்த பிச்சுருவேன் பிச்சு.. நான் அப்பவும்... இப்பவும் .. எப்பவும்..
சிங்கிள் தான்...😎😎😎😎

"அட போங்க டா... நான் போறேன்... கல்யாணம் பணணா  எங்கிட்ட தான் ஐடியா கேட்ப அப்போ பாத்துக்கறேன் உன்னை.. என நினைத்துக் கொண்டே மனகதவை மூடிவிட்டு பறந்து சென்றது அவள் மனது... 🤗🤗🤗🤗🤗


பி.கு... சும்மா சிரிக்க மட்டுமே.... அதனால கமிட் ஆனா அக்காஸ்,அண்ணாஸ், தங்கசிஸ், தம்பிஸ்  எல்லாம் என்னை திட்டிட கூடாது..

குட்டி குட்டி கதைகள்Where stories live. Discover now