29

2.4K 146 64
                                    

Sorry for late update

அடுத்த நாள் காலை அழகாய் விடிய வீட்டில் உள்ள அனைவரும் தயாராகி வரவேர்ப்பரையில் வந்து நின்றனர் .

மாறனும் ராஜாவும் வழக்கம்  போல் pant shirtடில் வர அவர்களை ஏற இறங்க பார்த்தார் கருப்பத்தேவர்.அவர் மேலும் கீழும் இருவரையும் பார்ப்பதை உணர்ந்த ராஜா மாறனின் காதில் திரும்பி "என்ன அண்ணே பெரியப்பா இப்டி பாக்குறாரு ?"என்க

மாறனோ" தெரியலயே டா "என்று கூறியபடி கீழே இறங்கி வந்துவிட

கருப்பத்தேவரோ அவர்களை பார்த்தவர் "ஏன்டா மகனுங்களா ஒருத்தன் புதுசா கல்யாணம் ஆகி இருக்கான் இன்னொருத்தனுக்கு கல்யாணம் ஆக போகுது இப்டியா உடுத்துறது?நல்லா வேட்டி சட்டை போட்டுட்டு மதுர வீரன் கணக்கா மடிச்சு விட்டு நடக்கிறது இல்லையா ?"என்று கேட்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முழிதனர் .

ராஜா"அது....பெரியப்பா நாங்க வேட்டி எடுத்துட்டு வரல "என்க

அவர்"அட இது ஒரு பிரச்சனையா ?"என்றவர்"  சிவகாமி" என்று குரல் கொடுக்க

சிவகாமி ஓடி வந்தவர் "என்ன ஜயா"என்று கேட்க

அவரோ"தம்பி ரெண்டு பேருக்கும் புது வேட்டி எடுத்து குடு மா "என்க மாறனும் ராஜாவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி வேரு வழியின்றி சிவகாமியை பின் தொடர்ந்தனர்.

சிவகாமி இருவருக்கும் பட்டு கரை இட்ட வேட்டியை எடுத்து கொடுத்து விட்டு வெளியே சென்று விட ராஜா அந்த வேட்டியை பார்த்தவன்"யோவ் அண்ணா என் இடுப்புல இது நிக்காதுனு தானயா நான் இத எடுத்துட்டு வரல .பெரியப்பா இப்டி சொல்லிட்டு போய்ட்டாரு "என்க மாறனோ அவன் புலம்பி முடிப்பதற்குள் வேட்டியை கட்டி முடித்து இருந்தான் பெல்ட்டுடன்.

ராஜா வாயை பிளந்தவன்"அண்ணே கட்டி விடு அண்ணே "என்க மாறனும் கட்டி விட்டான்.எனில் அது என்னவோ நழுவிய படி தான் இருந்தது.ராஜா மாறனைப் போல் அதில் பெல்ட் இட்டு வெளியே சென்று விட மாறன் தன்னை ஆளுயரக்கண்ணாடியில் பார்க்க அந்த சந்தன நிற சட்டையும்  பட்டுக்கரை இட்டிருந்த வேஷ்டியும் அவனின் நிறத்திற்கு கம்பீரமாக தோன்ற தனது பிம்பத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி(முடிவுற்றது)Where stories live. Discover now