பொறுப்பான மகளாக, கனிவான தோழியாக வலம் வரும் அழுத்தமான பெண் நந்தினி திருமண பேச்சுவார்த்தையில் நடந்த நிகழ்வுகளால் தன்னால் ஒரு அன்பான மனைவியாக இருக்க முடியாது என்று உறுதியாக நம்புகிறாள். அதே நேரம் கார்த்திக் நந்தினியின் வருங்கால கணவனாக பேசி முடிக்கப்பட்டவன் அவளுடைய புகைப்படத்தை கண்ட அக்கணமே காதலில் விழுந்தவன் மனைவியிடமும் அதையே எதிர்பார்த்து திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறான். வைராக்கியமான நந்தினியை கார்த்திக்கின் காதல் அன்பான காதல் மனைவியாக மாற்றுமா??