நான் சிறு வயதில் மிகவும் பிரமிப்புடன் படித்த நாவல்களில் என்றும் முதன்மையானது பொன்னியின் செல்வன். இன்றளவும் அதனை படிக்கும் போது முதல் முறை படிக்கும் போது இருந்த ஆர்வத்தையும் ஆவலையும் தூண்டும். அந்த நாவலில் எனக்கு மிகவும் பிடித்த கதாபத்திரம் வந்தியத்தேவன். வந்தியத்தேவனை மையமாக வைத்து ஒரு சரித்திர நாவல் எழுத வேண்டும் என்று என் நீண்ட நாள் ஆசை. முழுவதும் கற்பனை கதையாய் இல்லாமல் வரலாற்று நிகழ்வுடன் சேர்த்து எழுத இருக்கிறேன். என்னை வாசிக்க தூண்டிய நாவலின் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து எழுதுவதால் அதன் பாதிப்பு சிறது இருந்தாலும் முழுவதும் என் கற்பனை மற்றும் வரலாறுதான் பிரதானமாக இருக்கும். என் எழுத்தில் ஏதேனும் பிழையோ இருந்தால் தெரிவு படுத்தவும்.