வணக்கம் சகோதர சகோதரிகளே...
எல்லாரும் எப்படி இருக்கீங்க ?
சில சொந்த காரணங்களால் நான் சில நாட்கள் வாட்பேட்க்கு லீவ் விட போகிறேன்...
போறதுக்கு முன்னாடி இங்க உள்ள என்னோட பதிவுகளை நீக்க முடிவு பண்ணியிருக்கேன்...
அதனால, யாராவது எந்த பதிவையாவது படிக்கனும் நினைச்சு உங்க reading list ல வைத்திருந்தால் படித்துக் கொள்ளுங்கள்... வரும் ஞாயிறன்று நான் அத்தனை பதிவையும் unpublish செய்து விடுவேன்...
இதுநாள் வரையில் எனக்கும் என் பதிவுகளுக்கும் ஊக்கமும் ஆதரவும் அளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்...
மீண்டும் வரும் பொழுது புத்தம் புதிய கதைகளுடன் வரும் எனக்கு இப்பொழுது போல எப்போதும் ஆதரவு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்,
தங்களிடம் இருந்து தற்காலிகமாக விடைபெறுகிறேன்...
நீங்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்கள் வாழ்வை வாழ்ந்திட வாழ்த்துக்களுடன்...
உங்கள் தோழி,
ஸ்ரீநிதி☺️